கர்மவினையை ஆராய்ந்தறிதல்

கடந்த காலத்தைப் பற்றி அறிவது என்பது தற்போதைய வாழ்வு நிலைமையை முழுமையாகப் புரிந்துகொள்வதற்கான திறவுகோல் ஆகும். கர்மவினையை ஆராந்தறிதல் என்பது கடந்த கால வாழ்க்கையையும், நிகழ்கால வாழ்க்கையுடனான அதன் தொடர்பையும் ஆராய்வதாகும். ஏன் சில சூழ்நிலைகளை எதிர்கொள்கிறீர்கள் என்பதையும், கடந்த கால வாழ்க்கையிலிருந்து அறிந்தவை மூலம் உங்கள் வாழ்வு எங்கே செல்கிறது என்பதையும், உங்கள் வாழ்க்கை அனுபவங்களைப் புரிந்துகொண்டு அவற்றிலிருந்து நன்மைகளை பெறுவது எப்படி என்பதைப் புரிந்துகொள்ளவும் அந்த ஆய்வு உதவுகிறது.


* நாடியின் மூன்று வகைகளைப் பயன்படுத்தி கர்ம வினைகளை நாங்கள் அறிகிறோம். அவை கந்தர் நாடி, ஜீவ நாடி, பிரசன்ன நாடி ஆகும். கந்தர் நாடியின் 24 பிரிவுகளையும், ஜீவ மற்றும் பிரசன்ன நாடியில் ஒரு குறிப்பிட்ட முக்கிய பிரிவை பயன்படுத்தியும் கர்மவினைகளை ஆராய்ந்தறிகிறோம்.


* நமது சித்தரின் (ரிஷி பிரசன்னம்) தெய்வீக வழிகாட்டுதலையும், ஆத்மநிலை வழிகாட்டிகள், தேவதைகள் மற்றும் தெய்வீக படைப்புகளின் வழிகாட்டுதல்களை பெற ஆன்மீக ரீதியான எட்டு வித கேள்வி-பதில் முறையை பயன்படுத்துகிறோம்.


* உங்கள் சூழ்நிலையைப் பொறுத்து, குறிப்பிட்ட பிறப்பு நேர திருத்தம், திருமணப் பொருத்தம் அல்லது கர்ம வினைப்படி ஏற்பட்ட உறவுப் பிணைப்புகள் ஆகியவற்றை பகுப்பாய்வு செய்ய வேத ஜோதிட முறைகளையும் பயன்படுத்துகிறோம். உங்கள் கேள்வியின் அடிப்படையில், கர்மா வினையின் பாதையை துல்லியமாக அறிய மேலே உள்ளவற்றில் ஏதேனும் ஒன்றை அல்லது மேலே உள்ள அனைத்தையும் நாங்கள் பயன்படுத்தலாம்.