ஓலைச்சுவடி நாடி கணிப்புகள் என்பது ஒருவருடைய ஆன்மாவால் பிணைக்கப்பட்ட கர்ம வினை பதிவுகளை உயிரியளவியல் மூலம் கண்டறிவதற்கான மெய்ஞான முறையாகும். Read More
பனை ஓலை நாடிச் சுவடிகளில் குறிப்புகள் அனைத்தும் பிரபஞ்சத்தில் வெளிப்படுத்தும் ஒளி மற்றும் ஒளி ஆற்றல்களைக் கொண்டு கர்ம வினை பலன்கள் கணிக்கப்படுகிறது Read More
தங்களுடைய பனை ஓலைச்சுவடியில் வாசிப்பதின் மூலம் தங்களின் கர்ம வினைகளை சமன் செய்வதற்கான வழிமுறைகளும் அதற்கான மூலகாரணிகளையும் அறிந்து கொள்ள உதவுகிறது Read More
உலகெங்கும் உள்ள நாடி ஓலைச்சுவடி ஆர்வலர்களின் விருப்பத்திற்கேற்ப அவர்களுக்கான பிரத்யேக நாடி சுவடி மூலம் மிகச்சரியான பலன்களை அறியும் வண்ணம் திரிகாலா குழுவினர் எளிய வழிமுறைகளை உருவாக்கி உள்ளார்கள்.
எங்கள் குழுவில் உள்ள தேர்ச்சி பெற்ற வல்லுனர்கள் உங்களுக்குரிய பிரத்யேக ஓலைச்சுவடியை, எளிமையான முறையில் ஆய்வு செய்து கண்டறிவார்கள். அதன் பின் உங்கள் கர்ம வினைப்படி செய்ய வேண்டியவற்றை அந்த நாடியில் குறிப்பிட்டபடி செய்து வாழ்வாங்கு வாழ்வது பிரபஞ்சத்தின் அருளாகும்.
சித்தர் பெருமக்கள், மனித ஆன்மாவின் வாழ்க்கைப் பயணத்தில் ஏற்பட்ட வெவ்வேறு கர்ம வினைகளை அறிந்து தெய்வீக நாடி சோதிட முறையில் பதிவு செய்து, அவற்றை 12 பொதுகாண்டங்களாகவும், 8 சிறப்புக் காண்டங்களாகவும், தனித்தனிப் பிரிவுகளாக வகைப்படுத்தி நமக்கு அளித்துச் சென்றுள்ளார்கள்.
சித்தர்களின் மெய்ஞ்ஞானத்தை சார்ந்த அறிய வகை நாடி ஓலைச்சுவடிகள், தற்போது திரிகாலா குருமார்களிடமிருந்து கிடைக்கின்றன. உங்கள் கடந்த, நிகழ், எதிர்காலங்களை அறிந்து, கர்மப் பந்தங்களை சமன் செய்து வாழ்க்கையில் நன்மை பெறுங்கள்!
நாடி ஜோதிடம் என்பது சித்த பெருமக்கள் தங்களது ஆழமான தியானத்தால் பெற்ற மெய்ஞானத்தின் அடிப்படையில் உருவான ஓர் தொன்மையான ஆன்மீக ஜோதிட முறை ஆகும். அவர்கள் எழுதிய ஓலைச்சுவடிகளில், ஒருவரின் கடந்த கர்மவினைகள், நிகழ்கால வாழ்க்கை நிலை, மற்றும் எதிர்கால நிகழ்வுகள் குறித்து தெளிவான விபரங்கள் இடம் பெற்றுள்ளன. இந்த ஓலைச்சுவடிகள், உங்கள் கட்டைவிரல் பதிவின் அடிப்படையில் உங்கள் பெயரால் அடையாளம் காணப்படுகின்றன.
திரிகாலா மையத்தில், உங்கள் தனிப்பட்ட தகவல்கள் மற்றும் பாதுகாப்புக்கு மிக அதிக முக்கியத்துவம் வழங்கப்படுகிறது. உங்கள் நாடி ஜோதிட ஆலோசனை நடைபெறும் வரை மட்டுமே தரவுகள் பயன்படுத்தப்படும். ஜோதிட ஆலோசனை முடிந்ததும், அந்த தகவல்கள் எங்கள் இணையக் கட்டமைப்பில் இருந்து தானாகவே அழிக்கப்படும். எங்களிடம் எந்தவொரு தகவலும் நிரந்தரமாக சேமிக்கப்படாது.
நாடி ஜோதிடம் ஒரு அறிவியல் நடைமுறையாக சொல்லப்படுவதில்லை. அறிவியல் முறைகளின் அடிப்படையான அனுபவ சான்றுகள், பரிசோதனை மற்றும் சரிபார்ப்பு கொள்கைகள் நாடி சோதிடத்தில் கடைபிடிக்கப்படுவதில்லை. பழமையான நூல்கள் மற்றும் பாரம்பரிய மரபுகளை அடிப்படையாகக் கொண்டு நாடி சோதிடம் உரைக்கப்படுகிறது. ஒருவரது தனிப்பட்ட நம்பிக்கை மற்றும் அவரது விருப்பத்தின் அடிப்படையில் அவருக்கான நாடி தேடிக்கண்டறியப்பட்டு பலன் உரைக்கப்படுகிறது.
நாடி படித்தல் மூலம் கிடைக்கும் தெய்வீக வழிகாட்டு நடைமுறை வரையறுக்கப்பட்ட விதிகள் மற்றும் நிபந்தனைகளுடன் கூடியதாகும். அதாவது, ஒருவர் தனது கர்ம வினைகளை நாடி மூலம் அறிந்து, நிவர்த்திக்கும் வழிகளை பெற மது, மாமிசம் உண்ணாமலிருப்பது, தாம்பத்ய உறவை தவிர்ப்பது, இந்த பிரபஞ்சத்தில் உள்ள உயிர்களுக்கு உடல், மன அளவில் துன்பம் தராதது ஆகிய நற்பழக்கங்கள் அவசியம்.
திரிகாலாவில் உங்களது தனிப்பட்ட தகவல்கள் மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றுக்கு மிக முக்கியத்துவம் அளிக்கிறோம். பெறப்பட்ட பதிவுகள் மற்றும் தகவல்கள் அடிப்படையில் நாடி படித்து முடித்து, அதன் விவரங்கள் உங்களுக்கு தரப்பட்டவுடன், அவை அனைத்தும் தாமாகவே எங்கள் தொகுப்பிலிருந்து அழிந்து விடும். அவற்றை நாங்கள் சேமித்து வைப்பதும் கிடையாது.
அது பற்றிக் கவலைப்பட வேண்டியதில்லை. மகரிசிகள் அருளிய அனைத்து நாடிச் சுவடிகளும் பெரும் தொகுப்பாக வைத்தீசுவரன் கோவில் என்ற ஊரில் சேமித்து வைக்கப்பட்டுள்ளது. அந்த தொகுப்பிலிருந்து உடனடியாகவோ அல்லது பின்னரோ உங்களுக்கான ஓலைச்சுவடி தேடிக் கண்டுபிடிக்கப்படும்.
இல்லை. அதுபோன்ற எவ்விதமான தகவலும் தேவையில்லை.
மகரிஷிகளால் பதிவாக அளிக்கப்பட்ட ஓலைச்சுவடிகளிலிருந்து ஒருவரது வாழ்க்கை குறிப்பிடும் கர்ம வினைப்பதிவுகளை கண்டறிய அவர் சம்பந்தமான ஒரு சில அடிப்படை தகவல்கள் அவசியம். அவற்றின் மூலம் கண்டறியப்பட்ட நாடியில் குறிப்பிடப்பட்டவையும், அவரது வாழ்க்கை சம்பவங்களும் ஒன்றுக்கொன்று பொருத்தமாக இருக்கும். அதற்கேற்ற தகவல்களே ஒருவரிடமிருந்து பெறப்படும்.
நாடி வாசிப்பில் குருஜி சொன்ன பரிகாரம் செய்ததும் வாழ்க்கையில் தெளிவு மற்றும் நிம்மதி வந்தது. — லதா, கனடா