நாடி ஜோதிடம் பார்க்க கோயம்புத்தூரில் சிறந்த இடம்

வைத்தீஸ்வரன் கோவில் சிவ நாடி ஜோதிடம் பார்க்கும் சிறந்த இடம்

மகா சிவ வாக்கியர் - ஓலைச்சுவடிகள்

சிவவாக்கியர் அய்யா ஓலைச்சுவடியின் சிறப்பம்சங்கள்


மகா சிவ வாக்கிய மகரிஷியின் நாடி ஓலைச்சுவடிகள் நாடி சோதிடத்தில் பொதுவான பலன்களை அறிய உதவுகிறது. சிவ வாக்கியர் தனது நாடிச் சுவடிகளில் பதித்துள்ள தகவல்களை சிவபெருமானுக்கும், அன்னை பார்வதிக்கும் இடையில் நடந்த உரையாடல் வடிவில் அளித்துள்ளார். அதில் இந்த பிரபஞ்சத்தின் படைப்பு மற்றும் அழிவு பற்றிய ரகசியங்களை தந்துள்ளார். 


ஒருவரது வாழ்வில் புதிராக உள்ள கர்ம வினைகளை வெளிப்படுத்தி பலன் கூறும் நாடி முறையை அவர் அளித்திருக்கிறார். அவ்வகையில், ஒரு ஆன்மா 4 யுகங்களிலும் கடந்து வந்த பாதையையும், அந்த வாழ்க்கைகளில் பெற்ற செல்வம், பெற்றோர், திருமணம், ஆரோக்கியம், தொழில், பணி உள்ளிட்ட பல தகவல்கள் அதில் உள்ளன. மெய்ஞானம் பெற்ற சிவ வாக்கிய மகரிஷி 7-ம் நூற்றாண்டை சேர்ந்தவராக குறிப்பிடப்படுகிறார்.


தனது ஒரே செய்யுள் மூலம் கிட்டத்தட்ட 750 நாட்களுக்கான (தோராயமாக 2 ஆண்டுகள்) கர்ம வினைப்பலன்களை மகா சிவ வாக்கிய மகரிஷி பதிவு செய்துள்ளார்.

சிவவாக்கியர் அய்யா ஓலைச்சுவடி~ பலன்கள் வாசித்தல் விவரங்கள்

மகா சிவ மகரிஷி நாடியை உங்கள் வீட்டிலிருந்தே படிக்கக்கூடிய தொகுப்பாக திரிகாலா அளிக்கிறது. அதன் மூலம் உங்கள் கர்ம வினைகளை கண்டறிந்து கவலைகளை நீக்கும் வழிகளை கடைப்பிடித்து, வாழ்வில் நலம் பெறலாம். திரிகாலா வழங்கும் இந்த இணையதள நாடி படிக்கும் தொகுப்பு உங்கள் மனதையும், உடலையும் துன்புறுத்தும் கர்மவினைகளை அகற்றுவதுடன், தகுந்த தீர்வுகளையும் அளிக்கிறது.


தனி கண்டம் வாசித்தல்

இந்த நாடி தனி காண்டம் தொகுப்பானது ஆன்மாவின் எஞ்சியுள்ள கர்ம வினைகளை கண்டறிந்து அவற்றை அகற்றி, மகிழ்ச்சியான வாழ்வு பெற வழி காட்டுகிறது. அதற்காக 4-க்கும் மேற்பட்ட பகுதிகளிலிருந்து நாடி பலன்கள் படிக்கப்படுகின்றன.

  • ஓலைச்சுவடி நூல் ஆராய்தல்
  • இப்பிறவி கர்ம பொதுப்பலன் 
  • தனி கண்டம் பொதுப்பலன் 
  • வாழ்வின் முக்கிய நிகழ்வுகள் 
  • தக்க நவரத்தினம் தேர்வு 
  • கர்மா நிவர்த்தி பரிகாரங்கள் 
  • அதிர்ஷ்ட தரும் எண்கள்
  • நல்வாழ்வு தரும் மந்திரம்



ஒருங்கிணைத்து வாசித்தல்

அனைத்து நாடி காண்டம் ஒருங்கிணைத்து வாசிப்பதன் மூலம் ஒருவரது கர்ம வினைகளை துல்லியமாக தீர்வுகள் ஆராய்வதற்காக , 9க்கும் மேற்பட்ட காண்டம் பலன்கள் விபரங்களின் அடிப்படையில் நாடி பலன்கள் வாசிக்கப்படுகிறது

  • ஓலைச்சுவடி நூல் ஆராய்தல்
  • கடந்த கால கர்மா பதிவுகள்
  • இப்பிறவி கர்ம பாதிப்புகள்
  • ஆயுள்கால பொதுப்பலன்கள்
  • வாழ்வின் முக்கிய நிகழ்வுகள்
  • தொழில்முறை கணிப்புகள்
  • உறவுகளின் சிக்கல்கள்
  • பொருளாதார கணிப்புகள்
  • நன்மை தரும் நவரத்தினம் 
  • பரிகார தீர்வு விபரங்கள்
திரிகாலா பரிந்துரைகள்

அனைத்து நாடி காண்டம் ஒருங்கிணைத்து ஆராய்ந்து அதற்கான துல்லியமான பரிகாரங்களை கூடுதல் செலவின்றி நிறைவேற்றி, கர்மவினை பாதிப்புகளில் இருந்து தீர்வு காண திரிகாலாவின் பரிந்துரைக்கப்படுகிறது

  • ஓலைச்சுவடி தேடியறிதல்
  • கர்ம வினை பகுப்பாய்வுகள் 
  • இந்த பிறவிக்கான காரணம்
  • கர்மவினைத் தீர்வுகள்
  • ஆயுள்கால பொதுப்பலன்கள்
  • குடும்ப உறவுகளின் கணிப்பு 
  • நிதி - தொழில்முறை கணிப்பு
  • ஆன்மிக பாதை அறிதல்
  • அதிர்ஷ்ட காலங்கள்
  • பரிகாரங்கள் - நிவர்த்தி

navigate your life more clearly and confidently

கர்ம வினை தீர்க்கும் மருந்தகம்

இந்த அமர்வு திரிகாலாவில் உள்ள மெய்ஞானம் பெற்ற குரு அளிக்கும் போதனைகள் மூலம் மட்டுமே வழி நடத்தப்படுகிறது. கர்ம வினைகளால் உருவான தனி மனிதனின் பரு உடல் உருவாகி, பிறப்பெடுத்த காரணத்தை நுட்பமாக ஆராய்ந்தறிய அங்கீகாரம் பெற்ற சரியான வழி ஓலைச்சுவடி நாடி படித்தலே என்று எங்கள் கர்மவினையறியும் வல்லுனர்கள் தெரிவிக்கிறார்கள். 

அவ்வாறு நாடி படித்த பின்னர், பிறப்பெடுத்த ஒரு ஆன்மாவின் பழக்க வழக்கங்கள், நடத்தை முறைகள் ஆகியவை வாழ்வில் உருவாக்கும் விளைவுகளை, தத்துவார்த்தமாகவும், அறிவியல் பூர்வமாகவும் ஆராய்ந்தறிய முடியும் என்று எங்கள் நாடி சோதிட வல்லுநர்கள் குறிப்பிடுகின்றனர். மேலும், அந்த கர்ம வினைகளின் தொடர்ச்சியை மிகச்சரியாக கணித்து, கணித முறைகளுக்குட்பட்டு அவற்றை சமன் செய்யும் சாத்தியக்கூறுகளையும் தெரிந்து கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளார்கள்.

எங்கள் வல்லுநர்கள், இந்த பிரபஞ்சத்தின் வினை மற்றும் விளைவு என்ற விதிகளுக்கேற்ப உங்களுடைய நல்ல மற்றும் கெட்ட கர்மங்களால் உருவான வினைகள் ஏற்படுத்தும் விளைவுகளை சமன் செய்ய அவற்றின் செயல்படும் முறையறிந்து தக்க தீர்வுகளை அளித்து உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள். மேலும், எளிமையான, நடைமுறை சாத்தியமான பரிகார முறைகளையும் பரிந்துரைத்து மகிழ்ச்சியான வாழ்வைப் பெற உங்களுக்கு உதவியாக செயல்படுவார்கள்.

எங்கள் தனித்தன்மை

எங்கள் நாடி சோதிடர்கள் இந்தியாவில் உள்ள வைத்தீஸ்வரன் கோவில் நாடி சோதிட மையத்தில் கற்றவர்கள். பரம்பரை பரம்பரையாக நாடி சோதிட கலையில் ஈடுபட்டுள்ள முன்னோர்களிடமிருந்து அதை கற்றறிந்த பாக்கியம் பெற்றவர்கள். 

திரிகாலாவின் நாடி சோதிட வல்லுனர்கள் அனைவருமே கிட்டத்தட்ட 35 ஆண்டு கால அனுபவம் பெற்றவர்கள். அவர்கள் கந்தர் நாடி, ஜீவ நாடி, பிரசன்ன நாடி போன்ற பலவகை நாடிகளை படிக்கும் திறன் பெற்றவர்கள்.  

உலகெங்கும் உள்ள வாடிக்கையாளர்களுக்கு எங்கள் விரிவான சேவைகளை அளிக்கும் வகையில் பல்வேறு விதமான நாடி படிக்கும் முறைகள் மூலம் அனைத்து தரப்பு மக்களின் கர்ம வினை மற்றும் விளைவுகளை கூர்மையாக ஆய்ந்தறிந்து துல்லியமான பரிகார முறைகளையும் அளித்து வருகிறோம்.

இந்த பிரபஞ்சத்தில் வெளிப்படாமல் உள்ள நாடிச் சுவடிகளிலிருந்தும் வாடிக்கையாளர் கர்ம வினையறியும் சேவையில் எங்கள் குழுவினர் அயராது ஈடுபட்டு வருகிறார்கள்.