சுப்ரமணிய ஹோமம் செய்ய இப்போதே முன்பதிவு செய்யுங்கள்.

சுப்ரமணிய ஹோமம் செய்ய என் அருகில் உள்ள சிறந்த இடம்

சுப்ரமணிய ஹோமம் - எதிரிகள் மீது வெற்றி மற்றும் சாதனை அளிக்கும்

Embrace New Beginnings

சுப்பிரமணிய பெருமான் சிவபெருமானும் பார்வதி தேவியின் மகன் மற்றும் விநாயகரின் சகோதரன் என்று அறியப்படுகிறார். அவர் பெரும்பாலும் மயில் மீது ஏறி, ஈட்டி அல்லது வேல் ஏந்தி பக்தர்களுக்கு அருள் பங்குபடுத்துவார். சுப்பிரமணிய பெருமான் ஞானம், தைரியம், அறிவு மற்றும் தெய்வீக கருணையின் உருவமாக விளங்குகிறார். அவரது தாயால் வேல் பரிசாக வழங்கப்பட்டது. இது தேவியின் முழு சக்தியும் பிரதிக்கும் வல்லமை கொண்ட ஆயுதமாக விளங்குகிறது, மேலும் அதனுடைய ஆற்றல்கள் எதிரிகளையும் எதிர்மனை சக்திகளையும் அழித்து பிரபஞ்சது நீதியை நிலைய நாட்டும் வல்லமை கொண்டது. அவர் தனது குணாதிசயமான அருள், போரின் வீரத்தையும், ஞானம், வீரம் மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றுக்காக போற்றப்படுகிறார்.


சுப்ரமண்ய பாசுபத ஹோமம் (அ) சுப்ரமண்ய பஞ்சதசாசரி ஹோமம், சக்திவாய்ந்த ஆன்மீக சடங்கு ஆகும், இது பக்தர்களை முருகப் பெருமானின் தெய்வீக சக்தியுடன் இணைக்க உதவுகிறது. அவரது ஆசீர்வாதங்களைப் பெற்று, ஒருவர் தடைகளை தாண்டி ஞானத்தை வளர்க்கும், ஆன்மீக முன்னேற்றத்தை அடைந்து, நிறைவான வாழ்க்கையை வாழ முடியும்.


இந்த சக்தி வாய்ந்த சுப்ரமண்ய பாசுபத ஹோமம் ஆற்றல்கள், பாதுகாப்பு, தைரியம், ஞானம் மற்றும் தடைகளுக்கு எதிராக வெற்றி பெற உதவுகிறது.

சுப்ரமணிய ஹோமம் - ஐயமும் தீர்வும்

சுப்ரமண்ய பாசுபத ஹோமம் செய்வதன் மூலம், சுப்ரமணிய பெருமானின் அருளைப் பெற்று வாழ்க்கையில் பாதுகாப்பு, தைரியம், ஆன்மீக முன்னேற்றத்தை அடைந்து நிறைவான வாழ்க்கையை வாழ உதவுகிறது. இந்த ஹோமத்தில் பங்கேற்பவர்களுக்கு பின்வரும் நன்மைகள் கிடைக்கின்றன,

  • தீய சக்திகளிலிருந்து பாதுகாப்பு பெற்று, தைரியத்துடன் வாழ்வதற்கு உதவுகிறது.
  • எதிர்மறை சக்திகள் மற்றும் எதிரிகள் தொல்லையிலிருந்து பாதுகாப்பை வழங்குகிறது.
  • உடலும் மனதும் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
  • அறிவு, ஞானம் மற்றும் அறிவாற்றலை முன்னேற்ற உதவுகிறது.

எங்களுடைய குருமார்கள், உங்கள் பிறந்த நட்சத்திரம், கர்ணம், திதி, யோகம் ஆகியவற்றை வான்வெளி நிகழ்வுகளுடன் பொருத்தி, கர்ம வினைகளை சமன் செய்ய உகந்த நேரம் மற்றும் தேதியை ஆராய்ந்து தீர்மானிப்பார்கள். பின்னர், உங்களுடன் கலந்துகொண்டு சுப்ரமணிய ஹோமத்தின் நிகழ்வுகளை உறுதி செய்யப்படும்.


ஹோமம் செய்வதற்கு உகந்த இடம் : கோவில்கள், இல்லங்கள், அலுவலகங்கள், மற்றும் மத சடங்குகள் நடைபெறும் பிற இடங்கள்.


மங்களகரமான நேரம் பிரம்ம முகுர்த்தம், சூரியன் உதயத்திற்கு முன் 4.30 மணி முதல் 6.00 மணி வரை.


மங்களகரமான தேதி : வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில், குறிப்பாக சஷ்டி தினங்களின் செய்யுவது விசேஷமாக கருதப்படுகிறது.

நீங்கள் எந்த இடத்தில் இருந்தாலும், எங்களுடைய உயர்தர வீடியோ ஒளிபரப்பு தொழில்நுட்பத்தின் மூலம் இந்த சுப்ரமணிய ஹோமத்தில் பங்கேற்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


உங்களுக்கான உறுதியளித்த நாள் மற்றும் நேரத்தில், எங்களுடைய தலைமை குருநாதர் ஹோமத்தை நடத்துவார். அவர் வழங்கும் வழிகாட்டுதலின்படி, உங்கள் கர்ம வினைகளை நீக்குவதற்கான சுப்ரமணிய ஹோமம், சடங்குகள், பூஜைகள் மற்றும் தீபாராதனைகள் நேரடி ஒளிபரப்பில் பங்கேற்று, எந்த கூடுதல் செலவின்றி உங்கள் இடத்திலிருந்தே உங்கள் பிரார்த்தனைகள் மற்றும் வேண்டுதல்களை நிறைவேற்ற முடியும் அல்லது,


நேரில் ஹோமம் பூஜையில் கலந்து கொள்ளலாம்.

ஹோமத்தின் மூலம் உங்கள் பிரார்த்தனைகள் மற்றும் வேண்டுதல்கள் சுப்ரமணிய பகவானின் பாதங்களில் சமர்ப்பிக்கப்படுகின்றன. சுப்ரமணிய பகவானின் அருளினால், கர்ம வினைகளால் வாழ்க்கையில் ஏற்படும் அனைத்து தடைகள் மற்றும் தடங்களை அகற்றி, வாழ்க்கையில் வெற்றி, பரம சந்தோஷம், திடமான ஆரோக்கியம், மற்றும் அதிர்ஷ்டம் பெற உதவுகிறது.


இந்த சுப்ரமணிய ஹோமம் வழிபாட்டில் "ரட்சை" என்று அழைக்கப்படும் ஹோம பஸ்மம் மற்றும் குங்குமம் பிரசாதமாக உங்களுக்கு அனுப்பி வைக்கப்படும். இதனை உங்கள் பூஜை அறையில் வைத்து, தினமும் உங்கள் நெற்றியில் பூசிக் கொண்டே பயன்படுத்தி வர, இறைவனின் அருளைப் பெற உதவுகின்றது.

திரிகாலாவின் ஹோமம் சேவைகள் - சுப்ரமணிய ஹோமம்

திரிகாலா ஹோமம் சேவைகள் உங்கள் வீட்டிலிருந்தே பண்டைய ஆன்மிக சடங்குகளின் மகிமையையும் தெய்வீக அருளையும் அனுபவிக்க சிறந்த வாய்ப்பை வழங்குகிறது. சுப்ரமணிய ஹோமத்தின் புனித ஆற்றலையும் சக்தியையும் எங்களின் ஆன்லைன் தளத்தின் மூலம் நேரடியாக உங்கள் பங்களிப்புக்கு கொண்டு வருகிறோம். நீங்கள் வீட்டில் இருந்து கலந்துகொண்டாலும், அல்லது நேரில் பங்கேற்றாலும், இந்த தெய்வீக நிகழ்வில் எளிதாக இணைந்து அனுபவிக்கலாம்.

திரிகாலாவின் தலைமை குருநாதரின் மேற்பார்வையில், குருமார்கள் ஆகம விதிகளை மிகத் துல்லியமாக பின்பற்றி சுப்ரமணிய ஹோமம் நடத்துகிறார்கள். இந்த சடங்கின் போது உருவாகும் அக்னியின் ஒளி மற்றும் மந்திரங்களின் ஒலி பிரபஞ்ச சக்திகளுடன் இணைந்து, உங்கள் உள்ளார்ந்த ஆற்றல்களை சமநிலைப்படுத்தி, புத்துணர்வையும் தெய்வீக ஆற்றலையும் அளிக்கிறது. இது உங்கள் வாழ்க்கைக்கு தேவையான நேர்மறை ஆற்றல்களை உருவாக்கி, எதிர்மறை சக்திகளை அகற்ற உதவுகிறது.

ஆகம விதிகளுக்கு ஏற்ப நடத்தப்படும் இந்த சுப்ரமணிய ஹோமம், சுப்ரமணிய பெருமானின் தெய்வீக அருளைப் பெறுவதற்கும், வாழ்க்கையின் தடைகளை அகற்றுவதற்கும், உங்கள் வாழ்வை முன்னேற்றுவதற்கும் உதவுகிறது.இக்சுப்ரமணிய ஹோமம், உங்கள் வாழ்க்கையில் வெற்றி, பரம சந்தோஷம், திடமான ஆரோக்கியம், மற்றும் அதிர்ஷ்டம் பெற உதவுகிறது

திரிகாலாவில் நடைபெறும் சுப்ரமணிய ஹோமம் பின்வரும் முக்கிய நடைமுறைகளை உள்ளடக்கியதாகும்:

எங்களை பற்றி

13ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில், மதிப்பிற்குரிய ஐயா சித்தர் சிவப்பிரகாசம் திருவெள்ளறை திருச்சிக்கு அருகில் சிவஞான ஜீவசமாதி அடைந்தார். தனது ஞானத்தினால் ஆன்மீக சித்தாந்தங்களை விளக்கி, மனித குலத்தின் கர்மவினை சவால்களை அகற்ற நெறிமுறைகளை உருவாக்கி, சீடர்களுக்கு போதனை செய்து வருகிறார்.


ஐயா சித்தர் சிவப்பிரகாசத்தின் மானசீக சீடர்களான எங்கள் குருமார்கள், அவருடைய போதனைகளை அடிப்படையாகக் கொண்டு, மனிதர்களின் கர்மவினை சவால்களுக்கு நிரந்தர தீர்வுகளைக் கண்டறிந்து, மக்களுக்கு வழிகாட்டி வருகின்றனர்.

எங்களின் நிபுணத்துவம்

தனிநபரின் கர்மவினைகளை ஆராய்ந்து வாழ்க்கை மேம்படுத்த தேவையான தீர்வுகளை வழங்குவதே எங்கள் நிபுணத்துவம். இது தமிழர் பாரம்பரிய ஆகம சாஸ்திரங்களின் தொன்மையான வழிமுறைகளில் இருந்து பெறப்பட்ட அனுபவங்களின் அடிப்படையில் செயல்படுகிறது.


எங்கள் குருமார்கள், கர்மவினை மற்றும் எதிர்மறை ஆற்றல்களை சமநிலைப்படுத்த பரசுராம கல்ப சூத்திரம், தந்திர சமுச்சயம், பதாதி மற்றும் அதர்வண வேத சாஸ்திரங்களில் தேர்ச்சி பெற்றவர்கள். அவர்கள், யந்திரம் போன்ற பரம்பரிய தீர்வு முறைகளில் சிறந்த அனுபவத்துடன், தனிப்பட்ட தேவைகளுக்கேற்ப ஆலோசனைகளை வழங்குகிறார்கள்.

எங்களின் சிறப்பம்சங்கள்

கர்மவினை தீர்வுகள் தனித்துவமான செயல்முறைகளின் மூலம் உங்கள் வாழ்க்கை சவால்களில் இருந்து நிரந்தர ஆன்மீக ஜோதிடத் தீர்வுகளை வழங்க உதவுகின்றன.ஒவ்வொருவரின் கர்மவினைகளுக்கு ஏற்ப, கர்ம பலன்களை நிவர்த்தி செய்ய தகுந்த கோயில்கள், யாக சாலைகள், இயந்திர பூஜைகள் மற்றும் தோஷ நிவர்த்தி பூஜைகளுடன் கூடிய பரிகார முறைகள் எங்களுடைய உள்கட்டமைப்பின் மூலம் சரியான முறையில் மேற்கொள்ளப்படுகின்றன.


மேலும், எங்களுடைய சேவைகள் பல பரிகார ஸ்தலங்கள் மற்றும் ஆன்மீக வல்லுனர்களுடன் இணைக்கப்பட்டுள்ளதால், பரிகாரங்களை அதிகாரபூர்வமாக மற்றும் நேர்த்தியாக செயல்படுத்த உறுதிப்படுத்தும் சாத்தியங்களை உருவாக்குகிறது.

Guruji

எதிரிகளின் சவால்களில் இருந்து வெற்றி பெற சுப்பிரமணியத்தின் ஆசீர்வாதத்தை விரும்புகிறீர்களா

சுப்பிரமணியர் பகவானுக்கு - எங்கள் இதர சேவைகள்

சுப்ரமணியர் யந்திரம்

நோய்கள், கடன்கள், எதிர்மறை ஆற்றல்கள், சாபங்கள் மற்றும் எதிரிகளிலிருந்து பாதுகாப்பு அளித்து,மனதை கட்டுப்படுத்தி முயற்சிகளில் வெற்றியை அடைய உதவும் சக்திவாய்ந்த சுப்ரமணியர் யந்திரம்.

திருச்செந்தூர் சத்ரு சம்ஹார ஹோமம்

சத்ரு சம்ஹார மூர்த்தி அருளால்,எதிரிகளை அகற்றி, தொழில் தொல்லைகள், மனச்சோர்வு மற்றும் தீய சக்திகளை விரட்டும் வெற்றியினை தரும் இந்த சிறப்பு திருச்செந்தூர் சம்ஹார ஹோமத்தில் பங்கேற்கவும்.

கந்த சஷ்டி பூஜை

வாழ்க்கை பிரச்சனைகள், திருமண தடைகள், குழந்தையின்மை, தொழில் முடக்கம், எதிரிகள் தொல்லை போன்ற அனைத்து பிரச்சனைகளையும் தீர்க்க உதவும் கந்த சஷ்டி பூஜையில் பங்கேற்கவும்.

சுப்பிரமணியருக்கு அபிஷேக பூஜை

சுப்ரமணிய பகவானின் உயிர்ச்சக்தி பெற்று, அனைத்து தீவினைகள்,எதிரிகள் மற்றும் பிரச்சனைகள் தீர்ந்து, ஞானத்தில் சிறந்து அமைதியான வாழ்க்கை உதவும் பூஜையில் பங்கேற்கவும்.