சதாசிவ மூர்த்தி | சிவனின் ஐந்து முக அவதாரம் - திரிகாலா

ஐந்து முகங்களுடன் அருளும் சதாசிவ மூர்த்தி

சிவபெருமானின் 64 அவதாரங்கள் - சதாசிவ மூர்த்தி

சிவனை நினைத்து, சிவ மயமாய், சிவனே என்று இருக்க சித்தப்படும் அனைவருக்கும் சிவன் அருளாலே சிவன் தாள் பற்றி வாழ நினைக்கும் யாவருக்கும் நமது குருவின் ஆசி வேண்டி இந்த வியாசத்தினை எழுதுகின்றேன்.

தன்னிடம் அடைக்கலம் அடையும் பக்தர்களைக் காக்கும் பொருட்டு உலகில் நம் ஈசன் சிவபெருமான் நடத்திய திருவிளையாடல்கள் பல. சிவபெருமான் அறுபத்தி நான்கு திருமேனி கொண்டு திருவிளையாடல்களைப் புரிந்தார் என  நாடி ஓலை குறிப்புக்கள் மற்றும் புராணங்கள்  பலதெளிவுபடுத்துகின்றன. ஒவ்வொரு அவதாரத்தில் சிவன் இவ் பிரபஞ்சத்திற்கு காத்து  அருள்புரிகின்றார். 

சிவனின் 64 தாண்டவ வடிவங்களில், சதாசிவ மூர்த்தி வடிவமும் ஒன்றாகும். இவ்  சதாசிவ மூர்த்தி வடிவமானது  ஐந்து முகத்துடன் உள்ள வடிவாகும்.

பெயர் : சதாசிவ மூர்த்தி

வாகனம் : காளை

மூர்த்த வகை:மகேசுவர மூர்த்தம்

சிவ அவதார காரணி :

சடாமுடியிடன் காட்சியளிக்கும் இவர் ஐந்து திருமுகங்களைக் கொண்டவர் ஆவார் . தலைக்கு இரண்டாக பத்துக் கைகளைக் கொண்டவர் . இவறுடைய வலக்கையில் சூலமும் ,மழுவும், கட்வங்கமும் ,வாளும் ,பீஜா பூரகமும் ,வச்சிரமும் ,அபயமுத்திரையும் கொண்டு காட்சியளிக்கும் . 

இடக்கையில் நாகம் , பாசம் , நீலோற்பலம் , அங்குசம் , டமருகம் , வரதம் , மணிமாலை , பரிவட்டம் எனக்காணப்படும் . இவர் ஸ்படிக நிறத்துடன் காட்சிக்கொடுப்பவர் . மேலும் தியான பூஜைக்காக சகளத்திருவுருவத்துடன் காட்சியளிப்பவர் . இவரது இடைப்பாகத்தில் சதாசிவனும் , மேற்கே ஈசனும் , வடக்கே பிரமனும் , தெற்கே திருமாலும் , கிழக்கே ஈசனும் அடங்கியுள்ளனர் .

கன்மசா தாக்கியம்:

இம் முர்த்திகள் ஐவரும் அடங்கியள்ள நிலையை நாம் கன்மசா தாக்கியம் என்போம் . இத்தகைய பெருமைகளைக் கொண்டவர் சதாசிவ மூர்த்தியாவார் . சாந்த சொருபீயான இவரே அனைத்திற்கும் காரணகர்த்தாவாவார் . இந்த மூர்த்தி தயோஜாதம், வாமதேவம், அகோரம், தத்புருஷம், ஈசானம் முதலான ஐந்து திருமுகங்களுடன் எழுந்தருளி கெளசிக, காசிப, பாரத்வாஜ, கெளதம, அகத்தியர் ஆகிய முனிவர்களுடைய தவத்திற்கு வேண்டியதை அருளினார்.

அருளியவை:

முனிவர் கௌசிகரின் பொருட்டு இவரது சத்யோகஜாத முகத்திலிருந்து காமிகம் , யோகசம் , சிந்தியம் , காரணம் , அசிதம் என்னும் ஐந்து ஆகமங்களை அருளினார் . காசிபமுனிவருக்காக வாமதேவ முகத்திலிருந்து தீப்தம் , சூக்குமம் , சகச்சிரம் , அஞ்சுமான் , சுப்பிரபேதம் என்ற ஆதமங்களை அருளினார் . 

பரத்வாஜருக்காக அகோரமுகத்திலிருந்து விசயம் , நீச்சுவாசம் , சுவயம்புவம் , ஆக்நேயம் , வீரம் ஐந்து ஆகமங்களையும் அருளினார் . கௌதம முனிவரின் பொருட்டு தத் புருட முகத்தினின்று ரௌரவம் , மகுடம் , விமலம் , சந்திரஞானம் , முகவிஷ்பம் என்ற ஐந்து ஆகமங்களையும் அருளினார் .

முடிவில் அகத்தியருக்காக ஈசான முகத்திலிருந்து புரோத்கீதம் , இலளிதம் , சித்தம் , சந்தானம் , சர்வோக்தம் , பரமேச்சுவரம் , கிரணம் , வாதுளம் எனும் எட்டு ஆகமங்களையும் அருளினார் .

இவரை தரிசிக்கும் முறை

இவரை தரிசிக்க நாம் செல்ல வேண்டிய தலம் சிதம்பரமாகும் .இங்குள்ள கோயில் பிரகாரத்தில் ஐந்து பீடங்கள் உள்ளன . இங்கே சதாசிவமூர்த்தி அருளிபாலிக்கிறார் . 

சாப தோஷ நிவர்த்தி:

இங்குள்ள சிவகங்கைத் தீர்த்தத்தால் அபிசேகம் செய்து வில்வ இலை அர்ச்சிக்க அனைத்து மூர்த்திகளையும் வணங்கிய , அர்ச்சித்த பலன் கிடைக்கும் . 

மேலும் சோமவாரத்தில் மிளகு சீரக சாதத்தால் நைவேத்தியம் செய்ய மறுபிறவியில்லை எனும் நிலையை அடையலாம் . இங்குள்ள சிவபெருமானை திருநீரால் அபிசேகம் செய்ய சகல நன்மையும் உண்டாகும்.

எங்களின் தனித்துவமான கர்மா தீர்வுகளுக்கான பரிகார ஆலோசனை மற்றும் ஆன்மீக வழிகாட்டலுக்கு  தொடர்புகொள்ளவும் 

Post Tags

Comments

Add a Comment

Categories