புஜங்கத்ராச மூர்த்தி | பெரும்புலியூர் சிவபெருமான் கோயில்

பாம்புகளை அணிந்த புஜங்கத்ராச மூர்த்தி

சிவனை நினைத்து, சிவ மயமாய், சிவனே என்று இருக்க சித்தப்படும் அனைவருக்கும் சிவன் அருளாலே சிவன் தாள் பற்றி வாழ நினைக்கும் யாவருக்கும் நமது குருவின் ஆசி வேண்டி இந்த வியாசத்தினை எழுதுகின்றேன்.

தன்னிடம் அடைக்கலம் அடையும் பக்தர்களைக் காக்கும் பொருட்டு உலகில் நம் ஈசன் சிவபெருமான் நடத்திய திருவிளையாடல்கள் பல. சிவபெருமான் அறுபத்தி நான்கு திருமேனி கொண்டு திருவிளையாடல்களைப் புரிந்தார் என நாடி ஓலை குறிப்புக்கள் மற்றும் புராணங்கள் பல தெளிவுபடுத்துகின்றன. ஒவ்வொரு அவதாரத்திலும் சிவன் இப்பிரபஞ்சத்திற்கு காத்து அருள்புரிகின்றார்.

சிவனின் 64 தாண்டவ அவதாரங்களில், புஜங்கத்ராச மூர்த்தி வடிவமும் ஒன்றாகும். புஜங்கத்ராச மூர்த்தி பாம்புகளை அடக்கிய வடிவாகும்.

பெயர் : புஜங்கத்ராச மூர்த்தி

வாகனம் : காளை

மூர்த்த வகை : மகேசுவர மூர்த்தம்

சிவ அவதார காரணி

தாருவனத்தில் வசித்து வந்த முனிவர்கள் தவமே சிறந்தது என்றும், அவரது துணைவியர்களோ கற்பே சிறப்புடையது என்றும் வாழ்ந்து வந்தனர். இவர்களை சோதிக்க எண்ணினார் சிவபெருமான். பிட்சாடண கோலத்தில் சிவபெருமானும், மோகிணி கோலத்தில் திருமாலும் அவ்வனம் சென்று முனிவர்களின் தவத்தையும், துணைவியரின் கற்பையும் சோதித்தனர். இதனால் கோபம் கொண்ட முனிவர்கள் தவத்தை அழித்தது மோகினி அவதார மெடுத்த திருமால் என்றும், கற்பை பரிசோதித்தது பிட்சாடண ரூபம் கொண்ட சிவபெருமான் என்றும் தங்களது தவ வலிமையால் அறிந்தனர். அதனால் கோபம் கொண்டு விஷ மரங்களை குச்சிகளாக்கி அதை நெய்யில் நனைத்து ஹோமம் வளர்த்து வந்தனர்.

அதிலிருந்து வந்த பல கொடியப் பொருள்களை சிவனின் மீது ஏவினர். சிவனே அவற்றையெல்லாம் உடை, சிலம்பு, ஆயுதம், சிரோ மாலை, சேனை என்று உருமாற்றி தன்னிடம் வைத்துக்கொண்டார். தாங்கள் ஏவிய பொருள்கள் அனைத்தும் அவருக்கு ஆபரணமாகவும், படையாகவும் மாறியதை அறிந்த முனிவர்கள் பெரும் கோபம் கொண்டனர். மேலும் அதிக விஷமுள்ள பாம்புகளை சிவனின் மீது ஏவினர்.

அந்த பாம்பு உலகை நாசமாக்கும் பொருட்டு தன்னுடைய நான்து பற்களில் கடும் விஷத்துடன் சிவபெருமானை அடைந்தது. அவரும் அதற்கு சிறிது பயப்படும் படி நடித்து விட்டு, தன்னுடலில் ஏற்கனவே ஆபரணமாக உள்ள பாம்புகளுடன் சேர்ந்து விடும்படி கூறி சேர்த்தார். அப்பாம்புகள் அவருடலில் கங்கணம் (கைவளை, காப்பு), காலணி, அரைஞான், கயிறு ஆகியவையாக அணிந்து காட்சிக் கொடுத்தார்.

தாருவனத்து முனிவர் ஏவிய பாம்புகள் அவரை அச்சுறுத்தியமையால் அவரை புஜங்கத்ராச மூர்த்தி என்றனர். (புஜங்கள் - பாம்பு, திராசம் - பயப்படுதல்) புஜங்கத்ராச மூர்த்தியை தரிசிக்க நாம் செல்ல வேண்டிய தலம் பெரும்புலியூர் ஆகும். இந்த சிவபெருமான் கோயிலில் தான் சிவன் தன்னுடைய ஆடையாக பாம்புகளை அணிந்த படி காட்சிக் கொடுக்கின்றார். இந்த வடிவத்தையே நாம் புஜங்கத்ராச மூர்த்தி என்கின்றோம்.

பிரம்மனின் கர்வத்தை அடக்க ஐந்தாவது தலையை நகநுனியால் கிள்ளியதால் சிவபெருமானுக்கு பிரம்ம சிரச்சேத மூர்த்தி என்றப் பெயர் ஏற்படலாயிற்று.

இவரை தரிசிக்கும் முறை

புஜங்கத்ராச மூர்த்தியை தரிசிக்க நாம் செல்ல வேண்டிய தலம் பெரும்புலியூர் ஆகும். இந்த சிவபெருமான் கோயிலில் தான் சிவன் தன்னுடைய ஆடையாக பாம்புகளை அணிந்த படி காட்சிக் கொடுக்கின்றார்.

எங்களின் தனித்துவமான கர்ம தீர்வுகளுக்கான ஜோதிட ஆலோசனை மற்றும் ஆன்மீக பரிகார வழிகாட்டலுக்கு எங்களை தொடர்புகொள்ளவும்.

திரிகாலா – கர்மவினைத் தீர்வுகள்

Receive Divine Blessings of Lord Shiva
Participate in sacred Shiva rituals and homams performed with authentic Vedic traditions, devotion, and spiritual energy.
DIVINE YANTRA OFFER

Sacred Yantras

Starting from
₹1800
Spiritual energy • Protection, prosperity & positivity
  • Enhances positive vibrations
  • Supports prosperity
  • remove negative energies
  • Receives yantra blessings
Post Tags

Comments

Add a Comment

Categories