புவனேஸ்வரி ஹோமம் செய்ய இப்போதே முன்பதிவு செய்யுங்கள்

புவனேஸ்வரி ஹோமம் செய்ய என் அருகில் உள்ள சிறந்த இடம்

புவனேஸ்வரி ஹோமம்

Embrace New Beginnings

தெய்வீக அன்னையின் ஆசீர்வாதத்தையும் பாதுகாப்பையும் வேண்டிக்கொள்ளுதல்.

நீங்கள் ஆன்மீக மாற்றம், ஆசீர்வாதம் மற்றும் தெய்வீக வழிகாட்டுதலை நாடுகிறீர்களா? புவனேஷ்வரி தேவிக்கு அர்ப்பணிக்கப்பட்ட நெருப்பினால் செய்யப்படும் ஒரு சக்திவாய்ந்த சடங்கு புவனேஷ்வரி ஹோமம் என்ற புனிதமான சடங்காகும்.

பக்தி, அதிகாரம், மற்றும் ஞானம் ஆகியவற்றின் பயணத்தில் எங்களுடன் பங்குபெறுங்கள். புவனேஷ்வரி ஹோமம் என்பது தெய்வீக அன்னை மற்றும் பிரபஞ்சத்தின் ஆட்சியாளரான புவனேஷ்வரி தேவிக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு புனிதமான சடங்கு.

இந்த ஆழ்ந்த ஹோமம் பக்தர்களின் நல்வாழ்வு, பாதுகாப்பு மற்றும் செழிப்புக்காக தேவியின் ஆசீர்வாதத்தைப் பெற மிகுந்த பக்தியுடன் செய்யப்படுகிறது. இந்த ஹோமத்தை பக்தியுடனும் நம்பிக்கையுடனும் செய்வதன் மூலம், செழிப்பு, பாதுகாப்பு, நல்லிணக்கம் மற்றும் ஆன்மீக வளர்ச்சிக்காக தேவியினுடைய ஆசீர்வாதங்களைப் பெறலாம் என்பது ஐதீகம்.

Frequently Asking Question

இந்த ஹோமத்தை செய்வதால் புவனேஸ்வரி தேவியின் அருளைப் பெறுவதோடு. செழிப்பு, பாதுகாப்பு, வளமை மற்றும் ஆன்மீக வளர்ச்சியை பெறலாம்.

  • வாழ்க்கையில் வளமுடனும் செழிப்புடனும் இருக்கச் செய்கிறது.
  • நமது வாழ்க்கையில் நல்லிணக்கத்தையும் உறவுகளை சமநிலையில் வைத்துக்கொள்வதற்கும் பேருதவியாக இருக்கும்.
  • தீய வினைகள் மற்றும் சக்திகளிடமிருந்து நமது பாதுகாப்பை உறுதி செய்கிறது.
  • அனைத்து வளம் மற்றும் நலன்களை பெறச் செய்து வாழ்க்கையை மேம்படுத்துகிறது.

எங்களுடைய ஆசான் மற்றும் வல்லுனர்கள் உங்களுக்குரிய கர்ம வினைகள் மற்றும் உங்களுடைய பிறந்த நட்சத்திரம், கர்ணம், திதி, யோகம் ஆகியவைகளை விண்வெளி சாஸ்திரத்துடன் ஆராய்ந்து புவனேஸ்வரி ஹோமம் செய்வதற்கு தகுந்த நேரம் மற்றும் தேதியை தீர்மானித்து பின் உங்களிடம் கலந்தாலோசித்து முடிவு செய்வார்கள்.

ஹோமம் செய்வதற்கு உகந்த இடம்: கோவில்கள், இல்லங்கள், அலுவலகங்கள் மற்றும் ஏனைய மத கூட்டங்கள் நடத்தக்கூடிய இடங்கள்.

மங்களகரமான நேரம்: பிரம்ம முகுர்த்த நேரம் சூரிய உதயத்திற்கு முன் 4.30 மணி முதல் 6.00 மணி வரை

மங்களகரமான தேதி: செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளில் செய்வது விசேஷமானது.

எங்களுடைய (திரிகாலா) உயர்தரவீடியோஒளிபரப்பின்(High Quality Video Streaming)மூலம் இருந்த இடத்திலிருந்தே உங்களுக்கான இந்த புவனேஸ்வரி ஹோமத்தில் பங்கேற்பதற்காக சிறப்பான தொழில்நுட்ப உட்கட்டமைபுடன் அமைக்கப்பட்டுள்ளது.

எங்களுடைய தலைமை குரு உங்கள் சார்பாக மற்றும் உங்களிடம் உறுதியளித்த நாள் மற்றும் நேரத்தில் ஹோமத்தை மேற்கொள்வார். உங்களது கர்மவினை நிவர்த்தி செய்வதற்கு நேரிலோ அல்லது நேரடி ஒளிபரப்பு மூலமாகவோ அவர் அறிவுரைப்படி பூஜையில் பங்கேற்று உங்களுடைய பிரார்த்தனைகளையும் வேண்டுதல்களையும் எந்த ஒரு கூடுதல் செலவும் இல்லாமல் இருந்த இடத்திலிருந்தே நிறைவேற்றி கொள்ளலாம்.

விநாயக பெருமானின் ஆசிர்வாதங்கள்: நமக்கு ஏற்பட்ட தடைகளை புவனேஸ்வரி ஹோமம் மூலம் உடைதெறியலாம். புவனேஸ்வரி தேவியின் ஆசியின் மூலம் வாழ்க்கையில் பாதுகாப்பு, நல்லிணக்கம் மற்றும் ஆன்மீக பாதையில் வளர்ச்சியை பெறலாம்.

பிரசாதம்: ஹோமத்தின் மூலம் உங்களுடைய வேண்டுதல்கள் நல்ல படியாக நிறைவேறிய பிறகு உங்களுக்கு கடவுளின் ஆசிர்வாதங்கள் கிடைக்க பெறுவீர்கள் மற்றும் பிரசாதமானது உங்களுக்கு தபால் மூலம் அனுப்பி வைக்கப்படும். மேலும், உங்களுக்கு வாழ்க்கையில் இனி நல்ல காலங்கள் அமைய உறுதிப்படுத்தி கொள்கிறோம்.

புவனேஸ்வரி ஹோமம் – நமது பண்டையகால சடங்கு நடைமுறை

திரிகாலாவின் ஆன்லைன் ஹோமம் (நெருப்பினால் செய்யகூடிய சடங்குகள்) சேவைகளானது உங்கள் சொந்த வீட்டில் இருந்தபடியே தெய்வீக அருளைப் பெறுவதற்கும் பண்டைய சடங்குகளை அனுபவிப்பதற்கான உங்களுடைய நம்பிக்கையான இடமாக திகழ்கிறது. புவனேஸ்வரி ஹோமத்தின் ஆற்றலின் புனிதத்தன்மையையும் சக்தியையும் எங்களின் ஆன்லைன் தளத்தின் (Virtual platform) மூலம் நேரடியாக உங்களுக்குக் கொண்டு வருகிறோம், நீங்கள் இருக்கும் இடத்தில இருந்து கொண்டும் அல்லது நேரிலும் இந்த தெய்வீக நிகழ்வில் பங்கேற்று கொள்ளலாம். நீங்கள் ஆன்மீக வளர்ச்சி அல்லது அதில் குறிப்பிட்ட நோக்கங்களை எதிர்பார்பவராக இருந்தாலும், எங்கள் ஹோம சேவைகள் மூலம் (நெருப்பை வைத்து செய்யும் சடங்குகள்) ஆன்மிகத்துடன் நேரடி தொடர்பை ஏற்படுத்தி உங்களுடைய கர்ம வினைகளினால் வாழ்க்கையில் ஏற்படும் தடைகளை நீக்கவும் வாழ்க்கையில் வெற்றி பெறும் சந்தர்பத்தை உருவாக்கி கொடுக்கிறது.

புவனேஸ்வரி ஹோமத்தை மிகுந்த பக்தியுடனும், மனத்தூய்மையுடனும், வாழ்க்கையில் கர்ம வினைகளால் ஏற்படும் தடைகளை நீக்க பெறுவதற்கும் நடத்தப்படுவதை உறுதி செய்வதற்காக, திரிகாலாவின் குருநாதர் தங்களுடைய கர்ம சடங்குகளை அதற்குரிய ஆகம விதிகளின் படி துல்லியமாகவும் மேலும் எங்களுடைய தலைமை குருநாதர் அவர்களின் மேற்பார்வையில் மிகவும் நேர்த்தியாக ஹோமத்தை மேற்கொள்வதனால் ஏற்படும் ஒலி மற்றும் ஒளியின் ஆற்றல் மூலம் பிரபஞ்ச ஆற்றலுடன் பிணைக்க வழி வகுக்கிறது. இந்த ஆகம விதிப்படி உருவாக்கப்பட்ட ஆற்றல், உங்கள் வாழ்க்கைக் கனவின் வழியில் நிற்கும் தடைகளை கடக்க அதிகபட்ச செயல்திறனையும் தெய்வீக ஆசீர்வாதங்களையும் உறுதிப்படுத்த உதவுகிறது.

திரிகாலாவில் செய்யப்படும் புவனேஸ்வரி ஹோமம் என்பது பின்வரும் முக்கிய நடைமுறைகளை உள்ளடக்கிய ஒரு புனிதமான சடங்காகும்:

பிரசன்னம் பூஜை

புண்யாஹ வசனம்

கணபதி பூஜை

மகா சங்கல்பம்

கலச பூஜை

ஹோமம் மந்திரங்களை உச்சரித்தல்

மங்கள தீப ஒளி எழுப்புவது

பூர்ணாஹுதி

அபிசேகம்

தெய்வீகத்திற்கு தீப ஒளி எழுப்புவது

நவக்கிரக சாந்தி

உணவு தானம்

*

எங்களை பற்றி

13 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில், எங்கள் மதிப்பிற்குரிய ஐயா சித்தர் சிவப்பிரகாசம் அவர்கள் திருவெள்ளறை திருச்சிக்கு அருகில் இறை அருளால் சிவஞான ஜீவசமாதி ஏறினார். தன் பயிற்சியினால் ஞானத்தில் தெளிவு பெற்று அதில் உள்ளார்ந்த ஆன்மீக சித்தாந்தங்கள் மற்றும் பிணைக்கப்பட்ட மனித குலத்தின் கர்மவினை வாழ்க்கை சவால்களை அகற்றுவதற்காக நெறிமுறைகள் தனது சீடர்களுக்கு போதனைகள் மூலம் இன்றும் வழிநடத்தி சென்று கொண்டிருக்கிறார்.

ஐயா சித்தர் சிவப்பிரகாசம் அவர்களின் மானசீக சீடர்கள் ஆகிய எங்கள் குருமார்கள் ஒவ்வொரு குறைந்தது 15 வருடங்களாகவும், சிலர் கடந்த 45 வருடங்களாகவும் அய்யாவின் போதனைகளில் இருந்து கற்றதில் மூலம் கர்ம வினையால் மனித வாழ்வில் ஏற்படும் அனைத்து சவால்களுக்கும் சமன் செய்வதற்கான அறிவுரைகள் மற்றும் நிரந்தர தீர்வு நெறிமுறைகள் மக்களுக்கு வழிகாட்டுதலின் மூலம் உதவுகின்றனர்.


எங்களின் நிபுணத்துவம்

தனிமனிதனின் கர்மவினைகளை ஆராய்ந்து ,  அதன் செயல் வினைகளை பகுப்பாய்வதின் பலனாக மனித வாழ்வை மேம்படுவதற்கான தீர்வுகளை பரிந்துரைப்பதே எங்களது நிபுணத்துவம்.   கர்ம வினைகளை பகுப்பாய்வதில் முதன்மையாக விளங்குவது தமிழர் பாரம்பரிய உடன் பிணைக்கப்பட்ட பழங்கால  ஆகம சாஸ்திரங்களில் பரிந்துரைக்கப்பட்ட தீர்வு முறைகள். இந்த முறைகளை கையாள்வதில் செயல் அனுபவம் மிக்க நிபுணர்களாக எங்கள் குருமார்கள் விளங்குகிறார்கள்.

மேலும் ஒருவருடைய கர்மவினைகளை அகற்றுவதற்கான எதிர்வினை மற்றும் எதிர் மறை ஆற்றல்களையும் கையாள்வதற்காக தனித்துவம் மிக்க பரசுராமகல்ப சூத்திரம்,தந்திர சமுச்சயம்,பதாதி மற்றும் அதர்வண வேத சாஸ்திரங்களில் தன்னுள் கொண்டுள்ள நிகமா சாஸ்திரத்தில் நடைமுறை அனுபவம் தேர்ச்சி பெற்ற சிறந்த நிபுணர்களாக எங்கள் குருமார்கள் விளங்குகிறார்கள்.


எங்களின் சிறப்பம்சங்கள்

கர்மவினை தீர்வுகள் அனைத்தும் தனித்துவமாக செயல்முறை படுத்துவதன் மூலம் உங்களின் வாழ்க்கை சவால்களில் இருந்து நிரந்தர தீர்வு பெற உதவுகின்றன. அதன் அடிப்படையில் ஒருவரது கர்ம வினைகளுக்கு ஏற்ப கர்ம பலன்களை நிவர்த்தி செய்வதற்காக பிரத்தியோகமாக எங்களின் அணுகுமுறைகள் மற்றும் சேவைகள் கட்டமைக்கப்பட்டுள்ளது.

ஒருவருடைய கர்ம பலன்களுக்கு ஏற்ப பரிகார முறைகள் அவர்களுக்கு தகுந்த கோயில்கள் , யாக சாலைகள், இயந்திர பூஜைகள் மற்றும் தோஷ நிவர்த்தி பூஜைகளுடன் கூடிய அனைத்து சடங்குகளையும் மேற்கொள்வதற்காக எங்களுடைய திரிகாலாவின் உள்கட்டமைப்பு பிரத்யோகமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

எங்களுடைய சேவைகள் பல பரிகார ஸ்தலங்கள் மற்றும் ஆன்மீக வல்லுனர்களுடன் இணைக்கப்பட்டு உள்ளதால் தங்களின் கர்மவினை பரிகாரங்கள் மிக நேர்த்தியாக அதிகாரபூர்வமாக செயல்படுத்துவதற்கான சாத்தியக் கூறுகளை உறுதி அளிக்கிறது.


புவனேஸ்வரியின் ஆற்றல்கள் கொண்டு வாழ்க்கை சவால்களை சமாளிக்க விரும்புகிறீர்களா

Bhuvaneshwari Ma - Our Similar Services

புவனேஸ்வரி யந்திரம்

Be a part of the auspicious Bhuvneshwari Yantra and invite the blessings of Goddesss Bhuvneshwari for prosperity, success, and abundance in your life.

புவனேஸ்வரி பூஜை

Be a part of the auspicious Bhuvneshwari Puja and invite the blessings of Bhuvneshwari  for prosperity, success, and abundance in your life.

புவனேஸ்வரி அபிஷேகம்

Be a part of the auspicious Bhuvneshwari Abhishekam and invite the blessings of Bhuvneshwari  for prosperity, success, and abundance in your life.

கோயிலுக்கு எண்ணெய் ஸ்பான்சர்

Discover the transformative power of this sacred act and let the glow of the lamp illuminate your soul. Join us as we invite you to light a lamp at the temple.