logo

போகர் நாடி

போகர் நாடி

போகர் நாடி ஓலைச்சுவடிகள்

                 போகர் மகரிஷி நாடி எவ்வகையில் சிறந்தது..?

நாடி ஓலைச்சுவடிகளில் போகர் மகரிஷியின் நாடி ஓலைச்சுவடிகளே மிகவும் பழமையானதாக குறிப்பிடப்படுகிறது. தனது குருவான மகரிஷி அகஸ்திய முனியிடமிருந்து கற்ற ஞானத்தை தனது நாடிச்சுவடிகளில் பதிவு செய்து போகர் மகரிஷி மனித சமூகத்துக்கு தந்தருளியுள்ளார். அவ்வகையில் மனித ஆன்மாக்கள் உய்வடையும் வகையில் தெய்வீக வழிகளை நேரடி உபதேசமாக போகர் மாமுனிவர் தந்துள்ளார்.

ஒரே செய்யுளில் போகர் மகரிஷி சுமார் 365 நாட்களுக்கான (தோராயமாக ஒரு ஆண்டு) மனிதனின் கர்மபலன் குறித்த கணிப்புகளை தந்திருக்கிறார். 

உங்கள் வாழ்வில் மறைபொருளாக உள்ள கர்ம வினையின் பலாபலன்களை போகர் மகரிஷி தனது கணிப்புகளில் வெளிப்படுத்தி நல்வாழ்வுக்கான தெய்வீக வழியைக் காட்டுகிறார். அவ்வகையில், போகர் நாடி படிக்கும்போது ஒருவர் தனது கர்ம வினைகளை அறிவதுடன், அவரது புத்திர பாக்கியம், நோய் அகன்று உடல் நலமடையும் வழிமுறைகள் உள்ளிட்ட மனித வாழ்வின் பல அம்சங்களை அவர் பதிவு செய்துள்ளார். போகர் மகரிஷியின் காலம் கி.மு. 550 மற்றும் கி.மு.300 ஆகிய காலகட்டத்துக்கு இடைப்பட்டதாகும்.
வாழ்வில் குழப்பம் நீங்கி, தெளிவு பெற வேண்டுமா..?    

போகர் நாடி படிக்கும் தொகுப்பு

போகர் மகரிஷி நாடியை உங்கள் வீட்டிலிருந்தே படிக்கக்கூடிய தொகுப்பாக திரிகாலா அளிக்கிறது. அதன் மூலம் உங்கள் கர்ம வினைகளை கண்டறிந்து கவலைகளை நீக்கும் வழிகளை கடைப்பிடித்து, வாழ்வில் நலம் பெறலாம். திரிகாலா வழங்கும் இந்த இணையதள நாடி படிக்கும் தொகுப்பு உங்கள் மனதையும், உடலையும் துன்புறுத்தும் கர்மவினைகளை அகற்றுவதுடன், தகுந்த தீர்வுகளையும் அளிக்கிறது.  

எஞ்சிய கர்ம வினை அகற்றல்

இந்த நாடி படிக்கும் தொகுப்பானது ஆன்மாவின் எஞ்சியுள்ள கர்ம வினைகளை கண்டறிந்து அவற்றை அகற்றி, மகிழ்ச்சியான வாழ்வு பெற வழி காட்டுகிறது. அதற்காக 8-க்கும் மேற்பட்ட பகுதிகளிலிருந்து நாடி பலன்கள் படிக்கப்படுகின்றன.

  • எஞ்சிய கர்மா அறிதல் 
  • இப்பிறவி கர்ம பலன்கள் 
  • வாழ்வின் பொதுப்பலன் 
  • வாழ்வின் முக்கிய நிகழ்வுகள் 
  • தக்க நவரத்தினம் தேர்வு 
  • உறவுகளுக்குள் பிரச்சினை 
  • நிவர்த்தி தரும் பரிகாரங்கள் 
  • வாழ்வின் அதிர்ஷ்ட அம்சங்கள் 
  • நல்வாழ்வு தரும் மந்திரம் 
ஆரோக்கிய நல வாழ்வு

இந்த நாடி படிக்கும் தொகுப்பு மூலம் உடல் மற்றும் மன வலிமைக்கான வழியறிந்து ஊனுடம்பு ஆலயம் என்ற உண்மையை உணரப்பெறலாம். அவ்வகையில், ஆரோக்கிய வாழ்வு பெற உதவும் இந்த நாடி படிக்கும் தொகுப்பு 5-க்கும் மேற்பட்ட பகுதிகளில் விபரங்களைக் கொண்டதாக உள்ளது. 

  • துன்பங்களுக்கான கர்மா 
  • உடல் நல பாதிப்பு காரணம் 
  • கிரகங்களை வலுப்படுத்தல்
  • உடல் நலம் பற்றிய கணிப்புகள்
  • உணவுப்பழக்கம் சீரமைப்பு
  • உடல் நல விஷேச மந்திரம்
  • நல வாழ்வுக்கு ஹோமம்-பூஜை 
  • யோக - தியான முறைகள்
  • இறையருள் பெற பிரார்த்தனை
ஆன்மிக முன்னேற்றம் அடையுங்கள்

இந்த நாடித்தொகுப்பில் பதிவு செய்து படிப்பதன் மூலம் உள்ளும், புறமும் அமைதி நிலை பெற்று, உங்களுடைய ஆன்மிக பாதையில் முன்னேறிச் செல்ல வழி கிடைக்கிறது. இந்த நாடியைப் பதிவு செய்து படிப்பவர்களுக்கு 7-க்கும் மேற்பட்ட தொகுதிகளிலிருந்து அவர்களது விபரங்கள் பெறப்படுகின்றன.  

  • கர்ம பலன் விளைவுகள் அறிதல் 
  • பிறவி எடுத்த காரணம் அறிதல் 
  • முக்கிய வாழ்க்கை சம்பவங்கள் 
  • தியானப் பயிற்சி முறைகள் 
  • ஆன்மிகப் பாதை அறிதல் 
  • மன அமைதிக்கு மந்திரம் 
  • குருவை அறிய ஆன்மிக வழி 
  • கர்மா தீர பூஜை, பிரார்த்தனை 
  • அதிர்ஷ்ட வாழ்க்கை அம்சங்கள் 

                         கர்ம வினை தீர்க்கும் மருந்தகம்

இந்த அமர்வு திரிகாலாவில் உள்ள மெய்ஞானம் பெற்ற குரு அளிக்கும் போதனைகள் மூலம் மட்டுமே வழி நடத்தப்படுகிறது. கர்ம வினைகளால் உருவான தனி மனிதனின் பரு உடல் உருவாகி, பிறப்பெடுத்த காரணத்தை நுட்பமாக ஆராய்ந்தறிய அங்கீகாரம் பெற்ற சரியான வழி ஓலைச்சுவடி நாடி படித்தலே என்று எங்கள் கர்மவினையறியும் வல்லுனர்கள் தெரிவிக்கிறார்கள். 

அவ்வாறு நாடி படித்த பின்னர், பிறப்பெடுத்த ஒரு ஆன்மாவின் பழக்க வழக்கங்கள், நடத்தை முறைகள் ஆகியவை வாழ்வில் உருவாக்கும் விளைவுகளை, தத்துவார்த்தமாகவும், அறிவியல் பூர்வமாகவும் ஆராய்ந்தறிய முடியும் என்று எங்கள் நாடி சோதிட வல்லுநர்கள் குறிப்பிடுகின்றனர். மேலும், அந்த கர்ம வினைகளின் தொடர்ச்சியை மிகச்சரியாக கணித்து, கணித முறைகளுக்குட்பட்டு அவற்றை சமன் செய்யும் சாத்தியக்கூறுகளையும் தெரிந்து கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளார்கள்.

எங்கள் வல்லுநர்கள், இந்த பிரபஞ்சத்தின் வினை மற்றும் விளைவு என்ற விதிகளுக்கேற்ப உங்களுடைய நல்ல மற்றும் கெட்ட கர்மங்களால் உருவான வினைகள் ஏற்படுத்தும் விளைவுகளை சமன் செய்ய அவற்றின் செயல்படும் முறையறிந்து தக்க தீர்வுகளை அளித்து உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள். மேலும், எளிமையான, நடைமுறை சாத்தியமான பரிகார முறைகளையும் பரிந்துரைத்து மகிழ்ச்சியான வாழ்வைப் பெற உங்களுக்கு உதவியாக செயல்படுவார்கள்.

                                           எங்களின் தனிச்சிறப்பு

எங்கள் நாடி சோதிடர்கள் இந்தியாவில் உள்ள வைத்தீஸ்வரன் கோவில் நாடி சோதிட மையத்தில் கற்றவர்கள். பரம்பரை பரம்பரையாக நாடி சோதிட கலையில் ஈடுபட்டுள்ள முன்னோர்களிடமிருந்து அதை கற்றறிந்த பாக்கியம் பெற்றவர்கள். 

திரிகாலாவின் நாடி சோதிட வல்லுனர்கள் அனைவருமே கிட்டத்தட்ட 35 ஆண்டு கால அனுபவம் பெற்றவர்கள். அவர்கள் கந்தர் நாடி, ஜீவ நாடி, பிரசன்ன நாடி போன்ற பலவகை நாடிகளை படிக்கும் திறன் பெற்றவர்கள்.  

உலகெங்கும் உள்ள வாடிக்கையாளர்களுக்கு எங்கள் விரிவான சேவைகளை அளிக்கும் வகையில் பல்வேறு விதமான நாடி படிக்கும் முறைகள் மூலம் அனைத்து தரப்பு மக்களின் கர்ம வினை மற்றும் விளைவுகளை கூர்மையாக ஆய்ந்தறிந்து துல்லியமான பரிகார முறைகளையும் அளித்து வருகிறோம்.

இந்த பிரபஞ்சத்தில் வெளிப்படாமல் உள்ள நாடிச் சுவடிகளிலிருந்தும் வாடிக்கையாளர் கர்ம வினையறியும் சேவையில் எங்கள் குழுவினர் அயராது ஈடுபட்டு வருகிறார்கள்.