
கர்மவினையறிதல் என்ற இந்த செயல்முறை உங்கள் சிக்கல்களை தீர்க்க வாழ்வின் மையத்திலிருந்து செயல்படும் வழிமுறைகளை வழங்குகிறது.
உங்கள் வாழ்க்கை சிக்கல்களின் மூல காரணத்தை பகுப்பாய்வு செய்வதன் மூலம், உங்கள் சிக்கல்கள் அல்லது உறவுகளில் ஏற்படும் முரண்பாடுகள் ஆகியவை எந்தவிதமான பூர்வஜென்ம கர்ம வினைகளால் ஏற்பட்டது என ஆராய்ந்தறிகிறோம். அதன் மூலம் இந்த வாழ்வின் சிக்கல்களுக்கு உண்மையான காரணம் மூதாதையர் சாபமா அல்லது வேண்டாத நபர்களால் செய்யப்பட்ட பில்லி சூனியமா அல்லது வேறு இதர எதிர்மறை சக்திகளால் ஏற்பட்ட விளைவுகளா என்பதை துல்லியமாக ஆராய்ந்தறிவோம்.
கர்ம வினைகளின் அடிப்படையில் பல சிக்கல்கள் எளிதாக அகற்ற இயலாதவையாக வலுவுடன் இருக்கின்றன. அதனால்தான் ஒருவரது வாழ்க்கை மிகவும் பாதிப்புக்கு உள்ளாகிறது. அப்படிப்பட்ட சிக்கல்களை தீர்த்து நிவாரணம் அளிக்க சித்தர் வழி நெறிகளை பயன்படுத்தி எளிய தீர்வுகள் எங்களால் வழங்கப்படுகிறது.
சித்தர்களின் தெய்வீக வழிகாட்டுதல் மூலம் பல்வேறு நாடிகளின் வாசிப்பில் எங்களுக்கு 30 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் பெற்றிருப்பதால், உங்கள் துயரங்களை அகற்ற தெய்வீக வழிகள், சித்தர்கள் காட்டிய பண்டைய நெறிமுறைகள் ஆகியவற்றைப் பயன்படுத்தி எளிய பரிகாரங்களை எங்களால் வழங்க முடிகிறது.
கர்மவினை என்பது பிராரப்த கர்மா, சஞ்சித கர்மா, ஆகாமிய கர்மா என்று மூன்று வகையாக இருக்கிறது.
பிராரப்த கர்மா என்பது இந்த பிறவியில் நாம் அனுபவித்துக்கொண்டுள்ள இன்ப துன்பம் என்ற கர்ம வினைகளின் தொகுப்பாக அமைந்திருக்கிறது.
சஞ்சித கர்மா என்பது இந்த பிறவியில் நாம் இனிமேல் எதிர்கொள்ள வேண்டிய கர்மா வினைகளின் தொகுப்பாக அமைந்திருக்கிறது.
ஆகாமிய கர்மா என்பது இனிமேல் நாம் எடுக்கக்கூடிய பிறவிகளில் பலனை அளிப்பதற்கான கர்ம வினைகளின் தொகுப்பாக அமைந்திருக்கிறது.
ஒருவரது வாழ்க்கையை இந்த மூன்று விதமான கர்மவினைகள் தான் வழிநடத்திச் செல்கின்றன. மனித வாழ்வில் ஏற்படக்கூடிய துன்பங்களுக்கு பிராரப்த கர்ம வினைகளை அகற்றும் பொழுது தற்போதைய நடைமுறை துன்பங்களுக்கு ஒரு விடிவு ஏற்படுகிறது. அதை சித்தர்களுடைய வழிமுறைகளை பயன்படுத்தி ஒருவருடைய நாடியை அறிந்து படிப்பதன் மூலமாக பிராரப்த கர்மாவை சுலபமாக தீர்த்துக் கொள்ள முடியும்.
சஞ்சித கர்மா என்பது பல பிறவிகளாக பின் தொடர்ந்து வரக்கூடிய கர்ம வினைகளை குறிப்பிடுகிறது. அந்த சஞ்சித கர்ம வினை என்பதை அவ்வளவு எளிதாக உடைக்க இயலாது. அதன் காரணமாகவே மனிதர்களால் தாங்க இயலாத துன்பங்களான பலவித நோய்கள், பொருளாதார முடக்கங்கள், உடல் மற்றும் மன ரீதியான தீர்க்க இயலாத சிக்கல்கள் ஏற்படுகின்றன. அதற்கான சரியான தீர்வுகளும் சித்தர்கள் நாடிமுறையில் மற்றும் பல்வேறு ஆன்மீக வழிமுறைகளில் தீர்ப்பதற்கு நெறிகளை வகுத்து அளித்துள்ளார்கள்.
ஆகாமிய கர்மா என்பது இனிமேல் எடுக்கக்கூடிய பிறவிகளுக்கு கொண்டு செல்லப்படும் என்பதன் மூலம் அது முற்றிலும் ஆன்மீக ரீதியான வழிகாட்டுதல்கள் மூலமே கண்டறிந்து தீர்க்கப்பட முடியும். அதற்கான வழிமுறைகளையும் சித்தர் பெருமக்கள் நமக்கு தந்து சென்றுள்ளார்கள்.
திரிகாலாவில் மேற்கண்ட மூன்று விதமான கர்ம வினைகளையும் அகற்றுவதற்கான நாடி படிக்கும் தெய்வீக வழிமுறை சித்தர்களின் வழிகாட்டுதலின்படி மேற்கொள்ளப்படுகிறது.
13-ம் நூற்றாண்டின் முற்பகுதியில் எங்களுடைய அன்பிற்குரிய குரு ரிஷி சிவப்பிரகாசம் அவர்கள் இந்தியாவின், தமிழ்நாட்டில் உள்ள திருச்சி என்ற நகரத்திற்கு அருகில் முக்தி அடைந்தார். அவ்வாறு அவர் முக்தி அடைவதற்கு முன்பாக, மனித உடலில் இருந்து அவர் எங்களுக்கு அளித்த போதனைகள் மற்றும் ஆன்மீக பயிற்சிகள் மூலமாக இன்றும் எங்களை அவர் வழிநடத்தி வருகிறார்.
திரிகாலாவில் உள்ள நாடி படிப்பவர்கள் மற்றும் ஆன்மீக சேவை புரிபவர்கள் உள்ளிட்ட அனைவருமே எங்களுடைய அன்பிற்குரிய குருவான ரிஷி சிவப்பிரகாசம் ஐயா அவர்களுடைய அருளாசியை பெற்றவர்கள். 15 வருடங்கள் முதல் 45 வருடங்கள் வரை நாடி ஜோதிட துறையில் அனுபவம் பெற்றவர்கள்.