அனுமன் ஹோமம் செய்ய இப்போதே முன்பதிவு செய்யுங்கள்.

அனுமன் ஹோமம் செய்ய என் அருகில் உள்ள சிறந்த இடம்

ஆஞ்சநேய ஹோமம்

Embrace New Beginnings

ஆசீர்வாதம், பாதுகாப்பு மற்றும் வெற்றியை அனுபவியுங்கள்

ஆஞ்சநேயா அல்லது மாருதி என்றும் அழைக்கப்படும் ஹனுமான், மிகவும் மதிக்கப்படும் மற்றும் பிரியமான தெய்வங்களில் ஒருவர். அவர் வலிமை, பக்தி மற்றும் தன்னலமற்ற சேவையின் உருவகமாக கருதப்படுகிறார். ராமர் மீது அனுமனின் பக்தியும் அவரது அசைக்க முடியாத விசுவாசமும் அவரை எல்லையற்ற அன்பு மற்றும் அர்ப்பணிப்பின் அடையாளமாக மாற்றயுள்ளது.

ஆஞ்சநேய ஹோமம் என்பது ஹனுமானின் ஆசீர்வாதத்தைப் பெறுவதற்காக செய்யப்படும் ஒரு சக்திவாய்ந்த மற்றும் ஆன்மீக ரீதியிலான சடங்கு ஆகும், அவர் தடைகளை நீக்கி, தைரியத்தை அளிக்கிறார் மற்றும் பக்தர்களை தீங்குகளிலிருந்து பாதுகாக்கிறார் என்று நம்பப்படுகிறது. அவரது அருள் மற்றும் ஆசீர்வாதங்களைப் பெறுவதற்காக இந்த மங்கள சடங்குகள் செய்யப்படுகின்றன, அவை தடைகளை நீக்கி, பாதுகாப்பை வழங்குகின்றன, ஆன்மீக பலத்தை அளிக்கின்றன என்பது ஐதீகம்.

ஹனுமான் ஹோமத்தில் பங்கேற்பதன் மூலம், தைரியம், நம்பிக்கை மற்றும் ஆன்மீக வளர்ச்சி ஆகியவற்றால் நிறைந்த வாழ்க்கையை வாழ தெய்வீக ஆசீர்வாதங்களை நீங்கள் அனுபவிக்க முடியும்.

Frequently Asking Question

இந்த ஹோமத்தை செய்வதால் ஆஞ்சநேய பெருமானின் அருளைப் பெறுவதோடு. நாம் எண்ணிய செயல்களில் எல்லாம் வெற்றி பெற உறுதுணையாக இருக்கும்.

  • தீய சக்திகளிடமிருந்தும் அதன் மூலம் ஏற்படும் தடைகளிடமிருந்தும் நம்மை பாதுகாக்கிறது.
  • தைரியத்தை அளித்து வாழ்க்கையில் வரும் தடைகளை எதிர்கொள்வதற்கு பேருதவியாக இருக்கும்.
  • பக்தியுடன் நம்பிக்கையாக இருக்கச் செய்கிறது.
  • உடல் நலனுடனும் மனநலனுடனும் இருக்கச் செய்கிறது.

எங்களுடைய ஆசான் மற்றும் வல்லுனர்கள் உங்களுக்குரிய கர்ம வினைகள் மற்றும் உங்களுடைய பிறந்த நட்சத்திரம், கர்ணம், திதி, யோகம் ஆகியவைகளை விண்வெளி சாஸ்திரத்துடன் ஆராய்ந்து ஆஞ்சநேய ஹோமம் செய்வதற்கு தகுந்த நேரம் மற்றும் தேதியை தீர்மானித்து பின் உங்களிடம் கலந்தாலோசித்து முடிவு செய்வார்கள்.

ஹோமம் செய்வதற்கு உகந்த இடம்: கோவில்கள்.

மங்களகரமான நேரம்: சூரிய உதயத்திற்கு முன் அல்லது அஸ்தமனத்திற்கு முன் 4.30 மணி முதல் 6.00 மணி வரை

மங்களகரமான தேதி: சனிக்கிழமைகளில் செய்வது விசேஷமானது.

எங்களுடைய (திரிகாலா) உயர்தரவீடியோஒளிபரப்பின்(High Quality Video Streaming)மூலம் இருந்த இடத்திலிருந்தே உங்களுக்கான இந்த ஆஞ்சநேய ஹோமத்தில் பங்கேற்பதற்காக சிறப்பான தொழில்நுட்ப உட்கட்டமைபுடன் அமைக்கப்பட்டுள்ளது.

எங்களுடைய தலைமை குரு உங்கள் சார்பாக மற்றும் உங்களிடம் உறுதியளித்த நாள் மற்றும் நேரத்தில் ஹோமத்தை மேற்கொள்வார். உங்களது கர்மவினை நிவர்த்தி செய்வதற்கு நேரிலோ அல்லது நேரடி ஒளிபரப்பு மூலமாகவோ அவர் அறிவுரைப்படி பூஜையில் பங்கேற்று உங்களுடைய பிரார்த்தனைகளையும் வேண்டுதல்களையும் எந்த ஒரு கூடுதல் செலவும் இல்லாமல் இருந்த இடத்திலிருந்தே நிறைவேற்றி கொள்ளலாம்.

ஆசிர்வாதங்கள்: நமக்கு ஏற்பட்ட தடைகளை ஆஞ்சநேய ஹோமம் மூலம் உடைதெறிந்து. பாதுகாப்பு மற்றும் ஆன்மீகரீதியாக வலிமை அடையலாம்.

பிரசாதம்: ஹோமத்தின் மூலம் உங்களுடைய வேண்டுதல்கள் நல்ல படியாக நிறைவேறிய பிறகு உங்களுக்கு கடவுளின் ஆசிர்வாதங்கள் கிடைக்க பெறுவீர்கள் மற்றும் பிரசாதமானது உங்களுக்கு தபால் மூலம் அனுப்பி வைக்கப்படும். மேலும், உங்களுக்கு வாழ்க்கையில் இனி நல்ல காலங்கள் அமைய உறுதிப்படுத்தி கொள்கிறோம்.

ஆஞ்சநேய ஹோமம் – நமது பண்டையகால சடங்கு நடைமுறை

திரிகாலாவின் ஆன்லைன் ஹோமம் (நெருப்பினால் செய்யகூடிய சடங்குகள்) சேவைகளானது உங்கள் சொந்த வீட்டில் இருந்தபடியே தெய்வீக அருளைப் பெறுவதற்கும் பண்டைய சடங்குகளை அனுபவிப்பதற்கான உங்களுடைய நம்பிக்கையான இடமாக திகழ்கிறது. ஆஞ்சநேய ஹோமத்தின் ஆற்றலின் புனிதத்தன்மையையும் சக்தியையும் எங்களின் ஆன்லைன் தளத்தின் (Virtual platform) மூலம் நேரடியாக உங்களுக்குக் கொண்டு வருகிறோம், நீங்கள் இருக்கும் இடத்தில இருந்து கொண்டும் அல்லது நேரிலும் இந்த தெய்வீக நிகழ்வில் பங்கேற்று கொள்ளலாம். நீங்கள் ஆன்மீக வளர்ச்சி அல்லது அதில் குறிப்பிட்ட நோக்கங்களை எதிர்பார்பவராக இருந்தாலும், எங்கள் ஹோம சேவைகள் மூலம் (நெருப்பை வைத்து செய்யும் சடங்குகள்) ஆன்மிகத்துடன் நேரடி தொடர்பை ஏற்படுத்தி உங்களுடைய கர்ம வினைகளினால் வாழ்க்கையில் ஏற்படும் தடைகளை நீக்கவும் வாழ்க்கையில் வெற்றி பெறும் சந்தர்பத்தை உருவாக்கி கொடுக்கிறது.

ஆஞ்சநேய ஹோமத்தை மிகுந்த பக்தியுடனும், மனத்தூய்மையுடனும், வாழ்க்கையில் கர்ம வினைகளால் ஏற்படும் தடைகளை நீக்க பெறுவதற்கும் நடத்தப்படுவதை உறுதி செய்வதற்காக, திரிகாலாவின் குருநாதர் தங்களுடைய கர்ம சடங்குகளை அதற்குரிய ஆகம விதிகளின் படி துல்லியமாகவும் மேலும் எங்களுடைய தலைமை குருநாதர் அவர்களின் மேற்பார்வையில் மிகவும் நேர்த்தியாக ஹோமத்தை மேற்கொள்வதனால் ஏற்படும் ஒலி மற்றும் ஒளியின் ஆற்றல் மூலம் பிரபஞ்ச ஆற்றலுடன் பிணைக்க வழி வகுக்கிறது. இந்த ஆகம விதிப்படி உருவாக்கப்பட்ட ஆற்றல், பாதுகாப்பு, தைரியம் மற்றும் ஆன்மீக வளர்ச்சி ஆகியவற்றால் நிறைந்த ஒரு வாழ்க்கையை நோக்கி அதிகபட்ச செயல்திறனையும் தெய்வீக ஆசீர்வாதத்தையும் உறுதிப்படுத்த உதவுகிறது.

திரிகாலாவில் செய்யப்படும் ஆஞ்சநேய ஹோமம் என்பது பின்வரும் முக்கிய நடைமுறைகளை உள்ளடக்கிய ஒரு புனிதமான சடங்காகும்:

பிரசன்னம் பூஜை

புண்யாஹ வசனம்

கணபதி பூஜை

மகா சங்கல்பம்

கலச பூஜை

ஹோமம் மந்திரம் ஆவர்த்தி

மங்கள தீப ஆரத்தி

பூர்ணாஹுதி

அபிசேகம் (நீரேற்றம்)*

தெய்வீகத்திற்கு தீபா ஆரத்தி

நவக்கிரக சாந்தி

உணவு தானம்

*

எங்களை பற்றி

13 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில், எங்கள் மதிப்பிற்குரிய ஐயா சித்தர் சிவப்பிரகாசம் அவர்கள் திருவெள்ளறை திருச்சிக்கு அருகில் இறை அருளால் சிவஞான ஜீவசமாதி ஏறினார். தன் பயிற்சியினால் ஞானத்தில் தெளிவு பெற்று அதில் உள்ளார்ந்த ஆன்மீக சித்தாந்தங்கள் மற்றும் பிணைக்கப்பட்ட மனித குலத்தின் கர்மவினை வாழ்க்கை சவால்களை அகற்றுவதற்காக நெறிமுறைகள் தனது சீடர்களுக்கு போதனைகள் மூலம் இன்றும் வழிநடத்தி சென்று கொண்டிருக்கிறார்.

ஐயா சித்தர் சிவப்பிரகாசம் அவர்களின் மானசீக சீடர்கள் ஆகிய எங்கள் குருமார்கள் ஒவ்வொரு குறைந்தது 15 வருடங்களாகவும், சிலர் கடந்த 45 வருடங்களாகவும் அய்யாவின் போதனைகளில் இருந்து கற்றதில் மூலம் கர்ம வினையால் மனித வாழ்வில் ஏற்படும் அனைத்து சவால்களுக்கும் சமன் செய்வதற்கான அறிவுரைகள் மற்றும் நிரந்தர தீர்வு நெறிமுறைகள் மக்களுக்கு வழிகாட்டுதலின் மூலம் உதவுகின்றனர்.

எங்களின் நிபுணத்துவம்

தனிமனிதனின் கர்மவினைகளை ஆராய்ந்து ,  அதன் செயல் வினைகளை பகுப்பாய்வதின் பலனாக மனித வாழ்வை மேம்படுவதற்கான தீர்வுகளை பரிந்துரைப்பதே எங்களது நிபுணத்துவம்.   கர்ம வினைகளை பகுப்பாய்வதில் முதன்மையாக விளங்குவது தமிழர் பாரம்பரிய உடன் பிணைக்கப்பட்ட பழங்கால  ஆகம சாஸ்திரங்களில் பரிந்துரைக்கப்பட்ட தீர்வு முறைகள். இந்த முறைகளை கையாள்வதில் செயல் அனுபவம் மிக்க நிபுணர்களாக எங்கள் குருமார்கள் விளங்குகிறார்கள்.

மேலும் ஒருவருடைய கர்மவினைகளை அகற்றுவதற்கான எதிர்வினை மற்றும் எதிர் மறை ஆற்றல்களையும் கையாள்வதற்காக தனித்துவம் மிக்க பரசுராமகல்ப சூத்திரம்,தந்திர சமுச்சயம்,பதாதி மற்றும் அதர்வண வேத சாஸ்திரங்களில் தன்னுள் கொண்டுள்ள நிகமா சாஸ்திரத்தில் நடைமுறை அனுபவம் தேர்ச்சி பெற்ற சிறந்த நிபுணர்களாக எங்கள் குருமார்கள் விளங்குகிறார்கள்.

எங்களின் சிறப்பம்சங்கள்

கர்மவினை தீர்வுகள் அனைத்தும் தனித்துவமாக செயல்முறை படுத்துவதன் மூலம் உங்களின் வாழ்க்கை சவால்களில் இருந்து நிரந்தர தீர்வு பெற உதவுகின்றன. அதன் அடிப்படையில் ஒருவரது கர்ம வினைகளுக்கு ஏற்ப கர்ம பலன்களை நிவர்த்தி செய்வதற்காக பிரத்தியோகமாக எங்களின் அணுகுமுறைகள் மற்றும் சேவைகள் கட்டமைக்கப்பட்டுள்ளது.

ஒருவருடைய கர்ம பலன்களுக்கு ஏற்ப பரிகார முறைகள் அவர்களுக்கு தகுந்த கோயில்கள் , யாக சாலைகள், இயந்திர பூஜைகள் மற்றும் தோஷ நிவர்த்தி பூஜைகளுடன் கூடிய அனைத்து சடங்குகளையும் மேற்கொள்வதற்காக எங்களுடைய திரிகாலாவின் உள்கட்டமைப்பு பிரத்யோகமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

எங்களுடைய சேவைகள் பல பரிகார ஸ்தலங்கள் மற்றும் ஆன்மீக வல்லுனர்களுடன் இணைக்கப்பட்டு உள்ளதால் தங்களின் கர்மவினை பரிகாரங்கள் மிக நேர்த்தியாக அதிகாரபூர்வமாக செயல்படுத்துவதற்கான சாத்தியக் கூறுகளை உறுதி அளிக்கிறது.

ஆஞ்சநேயரின் ஆசிர்வாதத்துடன் மனவலிமை பெற விரும்புகிறீர்களா

Lord Hanuman ~ Our Similar Services

சனி யந்திரம்

Harness the positive vibrations of Saturn with our Saturn Yantra to create a harmonious environment for personal and professional growth.

சனி ஹோமம்

Experience the trans-formative power by performing Shani Homam in removing obstacles, clearing the path to success, and achieving your goals.

ஆஞ்சநேய அபிஷேகம்

Be a part of the auspicious Hanuman Abhishekam and invite the blessings of Lord Hanuman for prosperity, success, and abundance in your life.

கோயிலுக்கு எண்ணெய் ஸ்பான்சர்

Donating oil to a temple is a form of religious devotion and the simplest way to accumulate good karma.