logo

ஆன்லைன் நாடி ஜோதிடம், இணையதள நாடி ஜோதிட ஆலோசனை, இன்டர்நெட் நாடி ஜோதிடர், கர்ம வினை தீர்க்கும் நாடி ஜோதிடம்

வைத்தீஸ்வரன் கோயில் நாடி ஜோதிடம், மஹரிஷிகள் அருளிய நாடி ஜோதிடம், ரிஷிகள் எழுதிய பனை ஓலைச்சுவடிகள், சித்தர் அருள் நாடி ஜோதிடம், கர்மவினையை அகற்றும் சித்தர் நாடி ஜோதிடம்,

Agasthiyar Nadi Astrology: Explore ancient art of Nadi astrology attributed to Agasthiyar, providing profound insights into your destiny and life path அகத்தியர் நாடி

₹ 1852

பொதுப்பலன் 

கர்மவினை சீரமைப்பு
ஓலைச்சுவடி தேடியறிதல்
5 ஆண்டுக்கு ஒரு முறை பொதுப்பலன்
வாழ்வின் சம்பவங்கள் அறிதல்
பரிகார முறை - பூஜைகள் 
நாடி குறிப்பிடும் பிரத்யேக மந்திரம்
சாதக நாள் - அதிர்ஷ்ட அம்சங்கள்
நவரத்தின பரிந்துரை 

Siva Nadi Astrology Explore mystical realm of Nadi astrology associated with Siva vakkiyar to gain profound insights into your life destiny மகா சிவ நாடி

₹3789

திருமண விபரம்

திருமணப் பொருத்தம்
கர்மவினைப்படி உறவுகளை அறிதல்
5 ஆண்டுக்கு ஒரு முறை பொதுப்பலன்
வாழ்க்கைத் துணை குடும்ப விபரம்
திருமணம் நடக்கும் காலம்
திருமணத் தடைக்கான காரணம் 
தடையை அகற்ற பரிகாரம்
திருமண வாழ்வுக்குரிய பொருத்தம்

Bogar Nadi Astrology: Uncover hidden wisdom and divine insights from the ancient Nadi astrology texts attributed to the sage Bogar போகர் நாடி

₹4458

நல வாழ்வு 

உடல், மனம், ஆன்ம நலன்
கர்மவினை அறிதல்
ஆரோக்கியம் - வாழ்வு நிலை  
பாவ கர்மா அகன்று உடல் நலம் 
நல வாழ்வுக்கான உணவு முறை  
பரிகார பூஜை - உடல் நல மந்திரம் 
உடல் நல யோகப்பயிற்சிகள் 
பூஜைக்குரிய தெய்வங்கள் 
Thirumoolar Nadi Astrology Embrace the ancient wisdom of Thirumoolar Nadi astrology for profound revelations about your past, present,future திருமூலர் நாடி

₹5635

ஆன்மிக வளம்  

உடல், மனம், ஆன்ம நலன் 

கர்மவினை விளைவு அறிதல்

ஆன்மிகம் மற்றும் வாழ்வு நிலை

ஆன்மிக பயணத்துக்கான பாதை 

தியானம் செய்யும் முறை

குருவை அடைய ஆலோசனை

கர்மவினை நிவர்த்தி பூஜை - மந்திரம்

ஆன்மிக தேடலுக்கான தெய்வமறிதல்

Vasishtar Nadi Astrology: Unlock profound insights into your life's path and future through the ancient wisdom of Vasishtar's Nadi astrology வசிஷ்டர் நாடி

₹6627

தொழில் சிறப்பு

உடல், மனம், ஆன்ம நலன்
கர்மவினை-மறுபிறவி  
புதியன செய்ய சுபகாலம்
சாதக - பாதக காலம் 
சொத்து - பொருளாதாரம்
குடும்பம் - இதர உறவுகள் 
பரிகாரம் - பிரத்யேக மந்திரம் 
வாழ்க்கை சம்பவங்கள்  
திரிகாலா நாடி சோதிடம் மூலம் பல லட்சக்கணக்கான ஆன்மாக்கள் தங்கள் கர்ம வினைகளை அறிந்து கொள்ளும் வாய்ப்பை பெற்றுள்ளார்கள். அந்த வகையில் நீங்களும் உங்கள் கர்ம வினைகளை அறிந்து, அதற்கேற்ப நடந்து மகிழ்ச்சியான வாழ்வைப் பெற இது ஒரு சிறந்த வாய்ப்பாகும் !   
கர்மவினை உரைக்கும் பனையோலை பதிவேடு
ஒருவரது கை விரல் ரேகைகளை அடிப்படையாக வைத்து அவரது கர்ம வினையின் போக்கை கண்டறியும் ஆன்மிக தொழில்நுட்பம் தான் கிடைப்பதற்கரிய நாடி ஜோதிடம்  முறையாகும். அந்த வகையில் விதியை கண்டறிவதற்கான கருவியாக இந்த முறை அமைந்துள்ளது.  
ஒருவருக்கான நாடியை தேடிப்பிடித்து பலன் உரைப்பதற்கான விதிமுறைகள் பரந்த பிரபஞ்ச சக்தி நிர்ணயித்த பல்வேறு விதிகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்டதாகும். இந்த பரந்த பிரபஞ்ச வெளியில் அழிவற்ற வாழ்க்கைப் பரிணாமத்தின் முக்கியத்துவத்தை அறிய இயற்கை அளித்த முறையே நாடி சோதிடம்.
இந்த தெய்வீக கருவியின் மூலமாக மனிதனின் கலந்த காலம், நிகழ்காலம் மற்றும் எதிர்காலம் ஆகியவை கணிக்கப்பட்டு, அவரது கர்ம வினைக்குபட்டு நடக்கும் செயல்களை பனை ஓலைச் சுவடிகளாக எழுதி வைக்கப்பட்ட பதிவேடுகளிலிருந்து அறிவதே நாடி ஜோதிட முறை ஆகும்.
பலன்களை உள்ளபடி உரைக்கும் வழிமுறை

பனை ஓலை பதிவேடுகளாக அமைந்து, மனிதர்களின் கர்மவினை மற்றும் வாழ்க்கை பற்றித் தெரிவிக்கும் நுட்பமான வழிமுறை நாடி ஜோதிடம். பேரண்ட சமநிலை மாறா இயக்கத்தின் செயல்படு தத்துவமான ஒலி-ஒளி மூலம் கர்ம பலன்கள் ஓலைச்சுவடி பதிவுகளாக ரிஷிகளால் உருவாக்கி அளிக்கப்பட்டுள்ளன. 

ரிஷிகள் ஞானத்தால் அறிந்த கணித சமன்பாடுகள் மூலம் மனிதனின் கர்ம வினைகள், அதன் விளைவுகள், அதனால் ஏற்படும் மறுபிறவிகள் ஆகியவற்றை பதிவுகளாக உருவாக்கி, வழங்கப்பட்டதே நாடி ஜோதிடம். மனித கர்ம வினையறியும் இந்த அதிஉயர் ஆன்மிக ரகசியம் தவறான நபர்கள் கைகளில் கிடைத்து, முறையற்ற பயன்பாடு ஏற்படக்கூடாது என்று இதன் நுட்பங்கள் ரகசியமாகப் பாதுகாக்கப்படுகின்றன. 

நல வாழ்வுக்கு ஏற்ற அற்புதமான வழிகாட்டி

பேரண்டத்தின் மறுசுழற்சிக் கோட்பாட்டின்படி, காலக்கணக்கின் பதிவுகளாக உள்ள ஒரு ஆன்மாவின் நிலை, வெளிப்படுத்தும் புனித உண்மைகளை உடனுக்குடன் கண்டறிய உதவுவதே நாடி படித்தல் ஆகும்.

கர்ம வினை காரணமாக ஆன்மா எடுத்த பல்வேறு பிறவிகளில் செய்த வினைப்பதிவுகளின் தீய விளைவுகளை ஆச்சரியப்படத்தக்க வகையில் சமநிலைப்படுத்தும் திறன்மிகு வழியாகவும் இது உள்ளது. நாடி படித்தல் மூலம், கர்ம வினையை சமநிலைப்படுத்தும் வழிகள் அதாவது பலன் தரும் பரிகாரங்கள் மூலம், அவை துல்லியமாக சீர் செய்யப்படுகின்றன. 

சுருக்கமாக சொல்வதென்றால், நாடி படித்தல் என்பது இந்த மனிதப் பிறவி எடுத்த காரணத்தை அறிந்து கொள்வதாகும்.

எங்களுடைய பாரம்பரியம்

 எங்களுடைய குரு ரிஷி சிவப்பிரகாசம் ஐயா அவர்கள் 13-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் இந்தியாவிலுள்ள தமிழ்நாட்டின் திருச்சி என்ற நகருக்கு அருகில் சித்தி அடைந்தார். அவர் தன்னுடைய மானுட ரூபத்தில் இருக்கும்பொழுது எங்களுக்கு வழங்கிய போதனைகள்ஆன்மீக பயிற்சிகள் இன்றைய காலகட்டத்திலும் எங்களை வழிநடத்திச் செல்லும் தெய்வீக தன்மை பெற்றவையாக இருக்கின்றன.

எங்களுடைய நாடி ஜோதிடர்கள் இந்தியாவில் உள்ள தமிழ்நாட்டின் வைத்தீஸ்வரன் கோவிலில் உள்ள நாடி ஜோதிட மையத்தில் பயின்று சிக்கலான நுட்பங்களை அறிந்துள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் நாடி ஜோதிடத்தில் 25 வருடங்கள் முதல் 50 வருடங்கள் வரை அனுபவம் பெற்றவர்கள். அவர்கள் பாரம்பரியமிக்க நாடி ஜோதிட குடும்பங்களை சார்ந்தவர்களாக இருப்பதால் பரம்பரை பரம்பரையாக நாடி ஜோதிடத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

எங்களிடம் நாடி ஜோதிடம் படிக்க வரும் வாடிக்கையாளர்கள் கந்தர் நாடிஜீவநாடிபிரசன்ன நாடி உள்ளிட்ட பல்வேறு நாடி வகைகளில் இருந்து தங்களுடைய கேள்விகளுக்கான விடைகளை பெற முடியும். அந்த வகையில் ஆன்ம ஞானம் பெற்ற ரிஷி முனிவர்களின் அருளால் அவர்கள் அளிக்கும் தெய்வீக வழிகாட்டுதல்கள் மூலம் தனிமனிதருடைய கர்மவினைகளின் தன்மைகளை அறிந்து, எளிமையான தீர்வுகளை எங்கள் நாடி ஜோதிடர்கள் அளிக்கிறார்கள். 

பனை ஓலைச்சுவடிகள் மூலம் வாழ்க்கையில் ஒருவர் அனுபவிக்க வேண்டிய கர்மவினைகள் பற்றி சித்தர்கள் குறிப்பிட்ட ரகசிய உண்மைகளை சித்தர்கள் அருளால் அறிந்து, துல்லியமான பலன்களை வாடிக்கையாளர்கள் பெற முடியும். அந்த வகையில் எங்களுடைய நாடி ஜோதிடர்கள் குழு இந்த உலகில் கிடைப்பதற்கரிய பனை ஓலைச்சுவடி நாடிகளின் மூலமாகவும் வாடிக்கையாளர்களுக்கு துல்லியமான பலன்களை ஆய்வு செய்து வழங்குகிறார்கள்.

உலகெங்கும் உள்ள நாடி சோதிட ஆர்வலர்களின் விருப்பத்திற்கேற்ப அவர்களுக்கான பிரத்யேக நாடி சுவடி மூலம் மிகச்சரியான பலன்களை அறியும் வண்ணம் திரிகாலா குழுவினர் எளிய வழிமுறைகளை உருவாக்கி உள்ளார்கள்.


எங்கள் குழுவில் உள்ள தேர்ச்சி பெற்ற வல்லுனர்கள் உங்களுக்குரிய பிரத்யேக ஓலைச்சுவடியை, எளிமையான முறையில் ஆய்வு செய்து கண்டறிவார்கள். அதன் பின் உங்கள் கர்ம வினைப்படி செய்ய வேண்டியவற்றை அந்த நாடியில் குறிப்பிட்டபடி செய்து வாழ்வாங்கு வாழ்வது பிரபஞ்சத்தின் அருளாகும். 

  • பதிவு செய்யவும்
  • நாடி அறிய ஆலோசனை
  • கர்ம வினை கண்டறிதல்
  • கர்மா அகல வழிமுறை

உங்களுக்கான பிரத்யேக நாடியை கண்டறிதல்


ஆன்மாவின் கர்மப் பதிவுகளை அடையாளம் கண்டறிய நமது உடல் அங்கங்களின் தனித்தன்மை பெற்ற அடையாளப் பதிவுகள் உதவுகின்றன.


தங்களுக்கான பலனை அறிய விரும்பும் பெண்கள் தங்கள் இடது கை கட்டை விரல் ரேகையையும், ஆண்கள் தங்கள் வலது கை கட்டை விரல் ரேகையையும் நல்ல முறையில் பதிவு செய்து, அதை மின்னணு பதிவு பகிர்தல் முறையில் தெளிவான தரத்தில் அனுப்பி வைக்கவும். அந்த பதிவை வைத்து எங்கள் நாடி சோதிட வல்லுநர்கள் ஏராளமான ஓலைச்சுவடி கட்டுகளிலிருந்து அதற்குரிய நாடியை தேடி எடுப்பார்கள். அவரவர் கர்ம வினைகளுக்கேற்ப சிலருக்கு அந்த சுவடிக்கட்டுகளிலிருந்து, அவர்களுக்கான நாடி உடனே கிடைக்கும். சிலருக்கு பலமுறை ஆழ்ந்து தேடிய பின்னரே கிடைக்கும். அவ்வாறு கட்டுக்கட்டாக உள்ள ஏராளமான சுவடிகளிலிருந்து நாடி கிடைப்பதைப் பொறுத்து அவருக்கான பலன்கள் உரைக்கப்படும்.

                                                                               

உங்களுக்கான நாடியை கண்டறிதல்


நாடி சோதிடத்தில் சுவடியைக் கண்டறிந்து பலன் உரைப்பது என்பது சிக்கலான ஒரு முறையாகும். எங்கள் நாடி சோதிட வல்லுனர்கள் உங்களுக்கான ஓலையை நீங்களே தேர்வு செய்வதில் உதவுவார்கள். அவ்வாறு ஏராளமாக உள்ள ஓலைச் சுவடிக் கட்டுகளிலிருந்து உங்கள் நாடியை தேர்ந்தெடுத்து பலன் காண, அவர்கள் உதவியாக இருப்பார்கள். அந்த வகையில் சுவடிக்கான தேர்வில் நீங்கள் அவர்களது கேள்விக்கு ஆம் அல்லது இல்லை என்று பதிலளிக்க வேண்டும். 


அவர்கள் கேட்கும் கேள்விகளான, உங்கள் பெயர் இதுவா, உங்கள் தாய், தந்தை பெயர்கள் இவையா, உங்கள் வாழ்வில் நடந்த சில சம்பவங்கள் உண்மையா ஆகியவற்றிற்கு நீங்கள் அளிக்கும் பதிலைப் பொறுத்து சுவடி கண்டறியப்பட்டால் அதற்குரிய பலன்கள் உரைக்கப்படும். கிடைக்காவிட்டால், அடுத்தடுத்த மூன்று தடவைகளில் சுவடி கண்டறியப்பட்டு பலன்கள் உரைக்கப்படும்.

நாடி மூலம் உங்களைப் பற்றி அறிதல்


உங்களுக்கான சுவடி ஆராய்ந்து கண்டறியப்பட்டவுடன், எங்கள் நாடி சோதிட வல்லுனர்கள் அதில் உள்ள பதிவுகளும், உங்களது சொந்த விவரங்களும் பொருத்தமாக உள்ளதா என்பதை மறு பரிசீலனை செய்வார்கள். இந்த முறைகள் அனைத்தும் எங்கள் தலைமை நாடி சோதிட வல்லுனரின் வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனையின் பேரில் மேற்கொள்ளப்படும்.

காலம் மற்றும் இடம் ஆகிய கணக்கீடுகளின் அடிப்படையில், அந்த சுவடி, எங்கள் நாடி சோதிட வல்லுனர்களால் பிரித்து படிக்கப்பட்டு, அதில் குறிப்பிடப்பட்டுள்ள கர்ம வினைப்பதிவின் தகவல்கள் பலன்களாக உரைக்கப்படும். உங்கள் விருப்பத்திற்கேற்ப பலன்கள் தமிழ் அல்லது நீங்கள் விரும்பும் மொழியில் பதிவு செய்து தரப்படும். 

உலகின் எப்பகுதியில் இருந்தாலும் இந்த நாடி கண்டறியும் அமர்வில் நீங்கள் இணைய தள நேரலை அல்லது மின்னணு ஆலோசனை மூலமாகவோ பங்கேற்று பலன் பெறலாம்.  

கர்ம வினைகள் அகல வழிமுறைகள்


இந்த முறை திரிகாலா நாடி வல்லுநர்களால் பிரத்யேகமாகக் கடைபிடிக்கப்படுவதாகும்

இந்த அமர்வின் மூலம் நாடி ஆர்வலர்களின் எல்லாவிதமான கேள்விகளுக்கும் எங்கள் நாடி சோதிட வல்லுநர்கள் தகுந்த பதில் மற்றும் தீர்வுகளை அளிப்பார்கள். நாடி ஆர்வலருக்கு கிடைத்த நாடியின்படி, எங்கள் வல்லுநர்கள் கர்ம வினை மற்றும் அதன் விளைவுகளை ஆராய்ந்து கண்டறிய உதவி புரிகிறார்கள்.

அத்துடன், உங்களுக்கான நாடியில் குறிப்பிட்டுள்ளபடி, வாழ்க்கையின் கர்ம வினைகளை அறிவியல் பூர்வமாக அறிந்து நடப்பதற்கு எங்கள் நாடி வல்லுநர்கள் உதவியாக இருப்பார்கள். அதன் மூலம், நாடி ஆர்வலர்கள் வாழ்க்கைச் சிக்கல்களை மாறுபட்ட கோணத்தில் அணுகி, ஆக்கப்பூர்வமாகச் செயல்பட்டு நல்வாழ்வு பெறுகிறார்கள்.

நாடி சோதிடம் - காண்ட விவரங்கள்

சித்தர் பெருமக்கள், மனித ஆன்மாவின் வாழ்க்கைப் பயணத்தில் ஏற்பட்ட வெவ்வேறு கர்ம வினைகளை அறிந்து தெய்வீக நாடி சோதிட முறையில் பதிவு செய்து, அவற்றை 12 பொதுகாண்டங்களாகவும், 8 சிறப்புக் காண்டங்களாகவும், தனித்தனிப் பிரிவுகளாக வகைப்படுத்தி நமக்கு அளித்துச் சென்றுள்ளார்கள்.


பொது காண்டம்

குடும்ப காண்டம்

ஞான காண்டம்

சாந்தி காண்டம்

புத்திர காண்டம்

சத்துரு காண்டம்

திருமண காண்டம்

ஆயுள் காண்டம்

பிதாபாக்கிய காண்டம்

தொழில் காண்டம்

லாப காண்டம்

திசாபுக்தி காண்டம்


பல்வேறு நாடி ஜோதிட வாசிப்புக்கான நுழைவாயில்

மகரிசிகள் ஒவ்வொருவரும் தாங்கள் அடைந்த ஆழமான மெய்ஞான உணர்வின் அடிப்படையில் இந்த பிரபஞ்சத்தின் மீள் சுழற்சி பற்றிய மெய்யறிவை பல விதங்களில் விரிவாக வெளிப்படுத்தியுள்ளனர். ஒவ்வொரு மகரிசியும் தாங்கள் உணர்ந்து கொண்டதை வித்தியாசமான பரிமாணங்களில், கர்ம வினையின்பாற்பட்ட செயல்களை சமன் செய்வது மற்றும் தீர்வு காண்பது ஆகியவற்றுக்கான வழிமுறைகளை அளித்துள்ளார்கள்.

நாங்கள் வழங்கும் நாடி வகைகளில் சில இங்கே உள்ளன..

அத்திரி மகரிஷி
நாடி ஜோதிட-ஓலை சுவடி

இந்த மகரிஷி நாடி பனை ஓலையை வாசிப்பதற்கு திரிகாலா சேவை மையத்தை அணுகவும்

இடைக்காட்டுச் சித்தர்
நாடி ஜோதிட-ஓலை சுவடி

இந்த மகரிஷி நாடி பனை ஓலையை வாசிப்பதற்கு திரிகாலா சேவை மையத்தை அணுகவும்

கருவூரார் சித்தர்
நாடி ஜோதிட-ஓலை சுவடிs

இந்த மகரிஷி நாடி பனை ஓலையை வாசிப்பதற்கு திரிகாலா சேவை மையத்தை அணுகவும்./p>

கொங்கணர் சித்தர்
நாடி ஜோதிட-ஓலை சுவடி

இந்த மகரிஷி நாடி பனை ஓலையை வாசிப்பதற்கு திரிகாலா சேவை மையத்தை அணுகவும்.

குதம்பைச் சித்தர்
நாடி ஜோதிட-ஓலை சுவடி

இந்த மகரிஷி நாடி பனை ஓலையை வாசிப்பதற்கு திரிகாலா சேவை மையத்தை அணுகவும்.

சூரிய கலை
நாடி ஜோதிட-ஓலை சுவடி

இந்த மகரிஷி நாடி பனை ஓலையை வாசிப்பதற்கு திரிகாலா சேவை மையத்தை அணுகவும்.

சந்திர கலை
நாடி ஜோதிட-ஓலை சுவடி

இந்த மகரிஷி நாடி பனை ஓலையை வாசிப்பதற்கு திரிகாலா சேவை மையத்தை அணுகவும்.

Nadi on Demand
நாடி ஜோதிட-ஓலை சுவடி

இந்த மகரிஷி நாடி பனை ஓலையை வாசிப்பதற்கு திரிகாலா சேவை மையத்தை அணுகவும்.

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளும், விளக்கமும்

நாடி ஜோதிடம் எவ்வாறு செயல்படுகிறது..?

நாடி ஜோதிடம் என்பது ஒருவரது வாழ்க்கை கர்ம பலனை அறிய பொருத்தமான ஓலைச்சுவடியை தேடிக் கண்டுபிடிக்கும் செயல்முறையை உள்ளடக்கியது. நாடி படிப்பவர் பொருத்தமான ஓலைச்சுவடியைக் கண்டுபிடிக்க ஒருவரது கட்டைவிரல் ரேகை அல்லது வேறு சில அடையாளம் காணும் பதிவுகளைப் பயன்படுத்துகிறார். அவ்வாறு கிடைத்த ஓலைச்சுவடியில் ஒருவரது கடந்தகாலம், நிகழ்காலம் மற்றும் எதிர்காலம் பற்றிய விரிவான தகவல்கள் அடங்கியிருக்கும்.

நாடி ஜோதிடம் மூலம் எப்படிப்பட்ட தகவல்களை பெற முடியும்..?

ஒருவரது கடந்தகால வாழ்க்கை, நிகழ்கால வாழ்க்கை மற்றும் எதிர்கால வாழ்க்கை ஆகியவற்றை நாடி சோதிடம் மூலம் அறியலாம். மேலும், தொழில், உறவுகள், உடல் நலம் மற்றும் வாழ்க்கையின் மற்ற அம்சங்களைப் பற்றிய விவரங்களையும் நாடி ஜோதிடம் தெரிவிக்கிறது. ஒருவரது கர்ம வினைகளை அகற்ற, மகரிஷிகள் ஓலைச்சுவடிகளில் பதிவு செய்துள்ள பரிகார முறைகளையும் அறிந்து வாழ்க்கையில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காணலாம்.

நாடி ஜோதிடம் ஒரு அறிவியல் நடைமுறையா..?

நாடி ஜோதிடம் ஒரு அறிவியல் நடைமுறையாக சொல்லப்படுவதில்லை. அறிவியல் முறைகளின் அடிப்படையான அனுபவ சான்றுகள், பரிசோதனை மற்றும் சரிபார்ப்பு கொள்கைகள் நாடி சோதிடத்தில் கடைபிடிக்கப்படுவதில்லை. பழமையான நூல்கள் மற்றும் பாரம்பரிய மரபுகளை அடிப்படையாகக் கொண்டு நாடி சோதிடம் உரைக்கப்படுகிறது. ஒருவரது தனிப்பட்ட நம்பிக்கை மற்றும் அவரது விருப்பத்தின் அடிப்படையில் அவருக்கான நாடி தேடிக்கண்டறியப்பட்டு பலன் உரைக்கப்படுகிறது.

நாடி பார்க்க வருபவர் ஏன் கட்டுப்பாட்டு நியதிகளை பின்பற்ற வேண்டும்..?

நாடி படித்தல் மூலம் கிடைக்கும் தெய்வீக வழிகாட்டு நடைமுறை வரையறுக்கப்பட்ட விதிகள் மற்றும் நிபந்தனைகளுடன் கூடியதாகும். அதாவது, ஒருவர் தனது கர்ம வினைகளை நாடி மூலம் அறிந்து, நிவர்த்திக்கும் வழிகளை பெற மது, மாமிசம் உண்ணாமலிருப்பது, தாம்பத்ய உறவை தவிர்ப்பது, இந்த பிரபஞ்சத்தில் உள்ள உயிர்களுக்கு உடல், மன அளவில் துன்பம் தராதது ஆகிய நற்பழக்கங்கள் அவசியம்.  

எனது கட்டை விரல் பதிவை உங்களிடம் பகிர்வது எனக்கு பாதுகாப்பானதா..?

திரிகாலாவில் உங்களது தனிப்பட்ட தகவல்கள் மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றுக்கு மிக முக்கியத்துவம் அளிக்கிறோம். பெறப்பட்ட பதிவுகள் மற்றும் தகவல்கள் அடிப்படையில் நாடி படித்து முடித்து, அதன் விவரங்கள் உங்களுக்கு தரப்பட்டவுடன், அவை அனைத்தும் தாமாகவே எங்கள் தொகுப்பிலிருந்து அழிந்து விடும். அவற்றை நாங்கள் சேமித்து வைப்பதும் கிடையாது.

ஓலைச் சுவடிகளிலிருந்து எனக்கான நாடி கிடைக்காவிட்டால் என்ன செய்வது..?

அது பற்றிக் கவலைப்பட வேண்டியதில்லை. மகரிசிகள் அருளிய அனைத்து நாடிச் சுவடிகளும் பெரும் தொகுப்பாக வைத்தீசுவரன் கோவில் என்ற ஊரில் சேமித்து வைக்கப்பட்டுள்ளது. அந்த தொகுப்பிலிருந்து உடனடியாகவோ அல்லது பின்னரோ உங்களுக்கான ஓலைச்சுவடி தேடிக் கண்டுபிடிக்கப்படும். 

நாடி மூலம் பலனை அறிய பிறந்த நேர விவரங்களோ அல்லது ஜாதகமோ அவசியமா..?

இல்லை. அதுபோன்ற எவ்விதமான தகவலும் தேவையில்லை.

அடையாள பதிவுகள் பெறுவதன் மூலமே ஒருவரது அனைத்து விபரங்களும் பெறப்படுகிறதா..?

மகரிஷிகளால் பதிவாக அளிக்கப்பட்ட ஓலைச்சுவடிகளிலிருந்து ஒருவரது வாழ்க்கை குறிப்பிடும் கர்ம வினைப்பதிவுகளை கண்டறிய அவர் சம்பந்தமான ஒரு சில அடிப்படை தகவல்கள் அவசியம். அவற்றின் மூலம் கண்டறியப்பட்ட நாடியில் குறிப்பிடப்பட்டவையும், அவரது வாழ்க்கை சம்பவங்களும் ஒன்றுக்கொன்று பொருத்தமாக இருக்கும். அதற்கேற்ற தகவல்களே ஒருவரிடமிருந்து பெறப்படும்.