
பனை ஓலை பதிவேடுகளாக அமைந்து, மனிதர்களின் கர்மவினை மற்றும் வாழ்க்கை பற்றித் தெரிவிக்கும் நுட்பமான வழிமுறை நாடி ஜோதிடம். பேரண்ட சமநிலை மாறா இயக்கத்தின் செயல்படு தத்துவமான ஒலி-ஒளி மூலம் கர்ம பலன்கள் ஓலைச்சுவடி பதிவுகளாக ரிஷிகளால் உருவாக்கி அளிக்கப்பட்டுள்ளன.
ரிஷிகள் ஞானத்தால் அறிந்த கணித சமன்பாடுகள் மூலம் மனிதனின் கர்ம வினைகள், அதன் விளைவுகள், அதனால் ஏற்படும் மறுபிறவிகள் ஆகியவற்றை பதிவுகளாக உருவாக்கி, வழங்கப்பட்டதே நாடி ஜோதிடம். மனித கர்ம வினையறியும் இந்த அதிஉயர் ஆன்மிக ரகசியம் தவறான நபர்கள் கைகளில் கிடைத்து, முறையற்ற பயன்பாடு ஏற்படக்கூடாது என்று இதன் நுட்பங்கள் ரகசியமாகப் பாதுகாக்கப்படுகின்றன.
பேரண்டத்தின் மறுசுழற்சிக் கோட்பாட்டின்படி, காலக்கணக்கின் பதிவுகளாக உள்ள ஒரு ஆன்மாவின் நிலை, வெளிப்படுத்தும் புனித உண்மைகளை உடனுக்குடன் கண்டறிய உதவுவதே நாடி படித்தல் ஆகும்.
கர்ம வினை காரணமாக ஆன்மா எடுத்த பல்வேறு பிறவிகளில் செய்த வினைப்பதிவுகளின் தீய விளைவுகளை ஆச்சரியப்படத்தக்க வகையில் சமநிலைப்படுத்தும் திறன்மிகு வழியாகவும் இது உள்ளது. நாடி படித்தல் மூலம், கர்ம வினையை சமநிலைப்படுத்தும் வழிகள் அதாவது பலன் தரும் பரிகாரங்கள் மூலம், அவை துல்லியமாக சீர் செய்யப்படுகின்றன.
சுருக்கமாக சொல்வதென்றால், நாடி படித்தல் என்பது இந்த மனிதப் பிறவி எடுத்த காரணத்தை அறிந்து கொள்வதாகும்.
எங்களுடைய பாரம்பரியம்
எங்களுடைய குரு ரிஷி சிவப்பிரகாசம் ஐயா அவர்கள் 13-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் இந்தியாவிலுள்ள தமிழ்நாட்டின் திருச்சி என்ற நகருக்கு அருகில் சித்தி அடைந்தார். அவர் தன்னுடைய மானுட ரூபத்தில் இருக்கும்பொழுது எங்களுக்கு வழங்கிய போதனைகள், ஆன்மீக பயிற்சிகள் இன்றைய காலகட்டத்திலும் எங்களை வழிநடத்திச் செல்லும் தெய்வீக தன்மை பெற்றவையாக இருக்கின்றன.
எங்களுடைய நாடி ஜோதிடர்கள் இந்தியாவில் உள்ள தமிழ்நாட்டின் வைத்தீஸ்வரன் கோவிலில் உள்ள நாடி ஜோதிட மையத்தில் பயின்று சிக்கலான நுட்பங்களை அறிந்துள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் நாடி ஜோதிடத்தில் 25 வருடங்கள் முதல் 50 வருடங்கள் வரை அனுபவம் பெற்றவர்கள். அவர்கள் பாரம்பரியமிக்க நாடி ஜோதிட குடும்பங்களை சார்ந்தவர்களாக இருப்பதால் பரம்பரை பரம்பரையாக நாடி ஜோதிடத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
எங்களிடம் நாடி ஜோதிடம் படிக்க வரும் வாடிக்கையாளர்கள் கந்தர் நாடி, ஜீவநாடி, பிரசன்ன நாடி உள்ளிட்ட பல்வேறு நாடி வகைகளில் இருந்து தங்களுடைய கேள்விகளுக்கான விடைகளை பெற முடியும். அந்த வகையில் ஆன்ம ஞானம் பெற்ற ரிஷி முனிவர்களின் அருளால் அவர்கள் அளிக்கும் தெய்வீக வழிகாட்டுதல்கள் மூலம் தனிமனிதருடைய கர்மவினைகளின் தன்மைகளை அறிந்து, எளிமையான தீர்வுகளை எங்கள் நாடி ஜோதிடர்கள் அளிக்கிறார்கள்.
பனை ஓலைச்சுவடிகள் மூலம் வாழ்க்கையில் ஒருவர் அனுபவிக்க வேண்டிய கர்மவினைகள் பற்றி சித்தர்கள் குறிப்பிட்ட ரகசிய உண்மைகளை சித்தர்கள் அருளால் அறிந்து, துல்லியமான பலன்களை வாடிக்கையாளர்கள் பெற முடியும். அந்த வகையில் எங்களுடைய நாடி ஜோதிடர்கள் குழு இந்த உலகில் கிடைப்பதற்கரிய பனை ஓலைச்சுவடி நாடிகளின் மூலமாகவும் வாடிக்கையாளர்களுக்கு துல்லியமான பலன்களை ஆய்வு செய்து வழங்குகிறார்கள்.
உலகெங்கும் உள்ள நாடி சோதிட ஆர்வலர்களின் விருப்பத்திற்கேற்ப அவர்களுக்கான பிரத்யேக நாடி சுவடி மூலம் மிகச்சரியான பலன்களை அறியும் வண்ணம் திரிகாலா குழுவினர் எளிய வழிமுறைகளை உருவாக்கி உள்ளார்கள்.
எங்கள் குழுவில் உள்ள தேர்ச்சி பெற்ற வல்லுனர்கள் உங்களுக்குரிய பிரத்யேக ஓலைச்சுவடியை, எளிமையான முறையில் ஆய்வு செய்து கண்டறிவார்கள். அதன் பின் உங்கள் கர்ம வினைப்படி செய்ய வேண்டியவற்றை அந்த நாடியில் குறிப்பிட்டபடி செய்து வாழ்வாங்கு வாழ்வது பிரபஞ்சத்தின் அருளாகும்.
சித்தர் பெருமக்கள், மனித ஆன்மாவின் வாழ்க்கைப் பயணத்தில் ஏற்பட்ட வெவ்வேறு கர்ம வினைகளை அறிந்து தெய்வீக நாடி சோதிட முறையில் பதிவு செய்து, அவற்றை 12 பொதுகாண்டங்களாகவும், 8 சிறப்புக் காண்டங்களாகவும், தனித்தனிப் பிரிவுகளாக வகைப்படுத்தி நமக்கு அளித்துச் சென்றுள்ளார்கள்.
பொது காண்டம்
குடும்ப காண்டம்
ஞான காண்டம்
சாந்தி காண்டம்
புத்திர காண்டம்
சத்துரு காண்டம்
திருமண காண்டம்
ஆயுள் காண்டம்
பிதாபாக்கிய காண்டம்
தொழில் காண்டம்
லாப காண்டம்
திசாபுக்தி காண்டம்
மகரிசிகள் ஒவ்வொருவரும் தாங்கள் அடைந்த ஆழமான மெய்ஞான உணர்வின் அடிப்படையில் இந்த பிரபஞ்சத்தின் மீள் சுழற்சி பற்றிய மெய்யறிவை பல விதங்களில் விரிவாக வெளிப்படுத்தியுள்ளனர். ஒவ்வொரு மகரிசியும் தாங்கள் உணர்ந்து கொண்டதை வித்தியாசமான பரிமாணங்களில், கர்ம வினையின்பாற்பட்ட செயல்களை சமன் செய்வது மற்றும் தீர்வு காண்பது ஆகியவற்றுக்கான வழிமுறைகளை அளித்துள்ளார்கள்.
நாங்கள் வழங்கும் நாடி வகைகளில் சில இங்கே உள்ளன..
இந்த மகரிஷி நாடி பனை ஓலையை வாசிப்பதற்கு திரிகாலா சேவை மையத்தை அணுகவும்
இந்த மகரிஷி நாடி பனை ஓலையை வாசிப்பதற்கு திரிகாலா சேவை மையத்தை அணுகவும்
இந்த மகரிஷி நாடி பனை ஓலையை வாசிப்பதற்கு திரிகாலா சேவை மையத்தை அணுகவும்./p>
இந்த மகரிஷி நாடி பனை ஓலையை வாசிப்பதற்கு திரிகாலா சேவை மையத்தை அணுகவும்.
இந்த மகரிஷி நாடி பனை ஓலையை வாசிப்பதற்கு திரிகாலா சேவை மையத்தை அணுகவும்.
இந்த மகரிஷி நாடி பனை ஓலையை வாசிப்பதற்கு திரிகாலா சேவை மையத்தை அணுகவும்.
இந்த மகரிஷி நாடி பனை ஓலையை வாசிப்பதற்கு திரிகாலா சேவை மையத்தை அணுகவும்.
இந்த மகரிஷி நாடி பனை ஓலையை வாசிப்பதற்கு திரிகாலா சேவை மையத்தை அணுகவும்.
நாடி ஜோதிடம் என்பது ஒருவரது வாழ்க்கை கர்ம பலனை அறிய
பொருத்தமான ஓலைச்சுவடியை தேடிக் கண்டுபிடிக்கும் செயல்முறையை உள்ளடக்கியது. நாடி படிப்பவர்
பொருத்தமான ஓலைச்சுவடியைக் கண்டுபிடிக்க ஒருவரது கட்டைவிரல் ரேகை அல்லது வேறு சில அடையாளம்
காணும் பதிவுகளைப் பயன்படுத்துகிறார். அவ்வாறு கிடைத்த ஓலைச்சுவடியில் ஒருவரது கடந்தகாலம்,
நிகழ்காலம் மற்றும் எதிர்காலம் பற்றிய விரிவான தகவல்கள் அடங்கியிருக்கும்.
ஒருவரது கடந்தகால வாழ்க்கை, நிகழ்கால வாழ்க்கை மற்றும் எதிர்கால வாழ்க்கை ஆகியவற்றை நாடி சோதிடம் மூலம் அறியலாம். மேலும், தொழில், உறவுகள், உடல் நலம் மற்றும் வாழ்க்கையின் மற்ற அம்சங்களைப் பற்றிய விவரங்களையும் நாடி ஜோதிடம் தெரிவிக்கிறது. ஒருவரது கர்ம வினைகளை அகற்ற, மகரிஷிகள் ஓலைச்சுவடிகளில் பதிவு செய்துள்ள பரிகார முறைகளையும் அறிந்து வாழ்க்கையில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காணலாம்.
நாடி ஜோதிடம் ஒரு அறிவியல் நடைமுறையாக சொல்லப்படுவதில்லை. அறிவியல் முறைகளின் அடிப்படையான அனுபவ சான்றுகள், பரிசோதனை மற்றும் சரிபார்ப்பு கொள்கைகள் நாடி சோதிடத்தில் கடைபிடிக்கப்படுவதில்லை. பழமையான நூல்கள் மற்றும் பாரம்பரிய மரபுகளை அடிப்படையாகக் கொண்டு நாடி சோதிடம் உரைக்கப்படுகிறது. ஒருவரது தனிப்பட்ட நம்பிக்கை மற்றும் அவரது விருப்பத்தின் அடிப்படையில் அவருக்கான நாடி தேடிக்கண்டறியப்பட்டு பலன் உரைக்கப்படுகிறது.
நாடி படித்தல் மூலம் கிடைக்கும் தெய்வீக வழிகாட்டு நடைமுறை வரையறுக்கப்பட்ட விதிகள் மற்றும் நிபந்தனைகளுடன் கூடியதாகும். அதாவது, ஒருவர் தனது கர்ம வினைகளை நாடி மூலம் அறிந்து, நிவர்த்திக்கும் வழிகளை பெற மது, மாமிசம் உண்ணாமலிருப்பது, தாம்பத்ய உறவை தவிர்ப்பது, இந்த பிரபஞ்சத்தில் உள்ள உயிர்களுக்கு உடல், மன அளவில் துன்பம் தராதது ஆகிய நற்பழக்கங்கள் அவசியம்.
திரிகாலாவில் உங்களது தனிப்பட்ட தகவல்கள் மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றுக்கு மிக முக்கியத்துவம் அளிக்கிறோம். பெறப்பட்ட பதிவுகள் மற்றும் தகவல்கள் அடிப்படையில் நாடி படித்து முடித்து, அதன் விவரங்கள் உங்களுக்கு தரப்பட்டவுடன், அவை அனைத்தும் தாமாகவே எங்கள் தொகுப்பிலிருந்து அழிந்து விடும். அவற்றை நாங்கள் சேமித்து வைப்பதும் கிடையாது.
அது பற்றிக் கவலைப்பட வேண்டியதில்லை. மகரிசிகள் அருளிய அனைத்து நாடிச் சுவடிகளும் பெரும் தொகுப்பாக வைத்தீசுவரன் கோவில் என்ற ஊரில் சேமித்து வைக்கப்பட்டுள்ளது. அந்த தொகுப்பிலிருந்து உடனடியாகவோ அல்லது பின்னரோ உங்களுக்கான ஓலைச்சுவடி தேடிக் கண்டுபிடிக்கப்படும்.
இல்லை. அதுபோன்ற எவ்விதமான தகவலும் தேவையில்லை.
மகரிஷிகளால் பதிவாக அளிக்கப்பட்ட ஓலைச்சுவடிகளிலிருந்து ஒருவரது வாழ்க்கை குறிப்பிடும் கர்ம வினைப்பதிவுகளை கண்டறிய அவர் சம்பந்தமான ஒரு சில அடிப்படை தகவல்கள் அவசியம். அவற்றின் மூலம் கண்டறியப்பட்ட நாடியில் குறிப்பிடப்பட்டவையும், அவரது வாழ்க்கை சம்பவங்களும் ஒன்றுக்கொன்று பொருத்தமாக இருக்கும். அதற்கேற்ற தகவல்களே ஒருவரிடமிருந்து பெறப்படும்.