
நாடி வாசித்தலுக்கான கட்டமைப்பை உருவாக்கியவர்கள் பற்றிய தகவல்கள் இன்று வரை அறியப்படாத ஒன்றாக இருந்து வருகிறது. பனை ஓலை நாடிச்சுவடுகளில் உள்ள கோட்பாடுகள் இந்த பிரபஞ்சத்தால் உருவாக்கப்பட்ட சக்தி வாய்ந்த விதிமுறைகளுடன் தார்மீக ரீதியாக பிணைக்கப்பட்டுள்ளன. இந்த பேரண்டம் வாழ்க்கையின் நிரந்தரத்தன்மையை குறிப்பிடும் வகையில் தொடர்ந்து விரிவடைந்து கொண்டே வருகிறது. அதற்கு ஏற்ப இந்த பிரபஞ்சம் தன்னை மறுசுழற்சிக்கு உள்ளாக்கிக் கொள்ளும் திறன் பெற்றுள்ளது.
இந்த பேரண்டவியல் மற்றும் வானியல் ஆகியவற்றின் தத்துவார்த்த வெளிப்பாடுகள், வானியற்பியல் நிகழ்வுகள் வழியாக இந்த பிரபஞ்சம் மறுசுழற்சி செய்து கொள்வதை நம் பெருமைமிகு முனிவர்கள் வெளிப்படுத்தியுள்ளார்கள். அவற்றை பல்வேறு கணித முறைகளாக வரையறை செய்து, பனை ஓலைச்சுவடிகளில் தெய்வீகமான செய்யுள் வடிவத்தில் பதிவு செய்து வைத்துள்ளார்கள்.
அவ்வாறு பதிவு செய்யப்பட்ட அந்த ஓலைச்சுவடி தொகுப்புகள் துல்லியமாக நாடி முறை கோட்பாடுகளின் அடிப்படையில் வகைப்படுத்தப்பட்டுள்ளன. அத்தகைய தெய்வீக முறை இந்த விரிவடையும் பிரபஞ்சத்தின் ரகசியங்கள் பற்றிய ஆழமான எதிர்கால உண்மைகளைத் தங்களுக்குள் கொண்டுள்ளன. அந்த வகையில் கர்ம வினைகளை அகற்றும் சமன்பாடுகள் இந்த பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து உயிர்களின் எதிர்கால நலனுக்கும் ஏற்ற வகையில் அவற்றில் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.
தவறாக பயன்படுத்தப்படுவதை தவிர்க்க நமது மகரிஷிகள் அருளிய மகத்தான வழிமுறைகள்
உடல் எடுத்த ஆன்மாவின் தனிப்பட்ட அங்கப் பதிவுகளை பெற்று நாடியறியும் முறை நமது சித்தர் பெருமக்களால் அளிக்கப்பட்டுள்ளது. அது மேலும் நாடி சோதிடர்களால் பல்வேறு புள்ளிவிபரங்கள் பெறப்பட்டு உறுதி செய்யப்படுகிறது. பேரண்ட மறு சுழற்சியோடு தொடர்புடைய ஆன்மாவின் கர்ம வினைப்பதிவுகளை அறிய அவை உதவுகின்றன. அதன் மூலம் ஆன்மாவின் கர்ம வழி வாழ்க்கைப் பயணங்களை வரையறை செய்து விபரங்களை அறியவும் அவை துணையாக உள்ளன.
ஓலைச்சுவடிகள் சப்த அலைகளை வரையறை செய்து அவற்றை சுவடிகளில் பதிவாக அளித்து, அனைத்து உயிர்களுக்கும் சித்தர் பெருமக்கள் நன்மை செய்துள்ளனர். உயர்நிலை தெய்வீக தகவல்களை அறிய தகுதி பெற்ற ஆன்மாக்கள் தங்கள் கர்மாவை அறிந்து கொள்ள கீழ்க்கண்ட எளிய வழிகளை கடைபிடித்து பயன் பெறலாம்.
ஒரு ஆன்மாவின் புனித ரகசியங்களை பேரண்ட மறு சுழற்சிக்கேற்ப வரிசைப்படுத்திய வாழ்க்கை சம்பவங்களை நாடி படித்து அறியலாம். அதன் மூலம் பல பிறவிகளாக பெற்ற கர்ம வினைகளின் பாதிப்பை ஆச்சரியமான வகையில் தீர்க்கவும் நாடி வாசிப்பு உதவுகிறது. இந்த பிறப்புக்கான காரணத்தை அது சுருக்கமாக வெளிப்படுத்துகிறது.
நாடி படிப்பதால் ஆன்மாவின் கர்மா பற்றியும், எஞ்சியுள்ள அதன் விளைவுகள் பற்றியும் அறிந்து சரியான, துல்லியமான நிவர்த்தி முறைகளை கையாள வழி காட்டப்படுகிறது. பரிகார முறைகள் முற்றிலும் இயற்கை மற்றும் பாரம்பரிய வழிகளிலேயே அமைந்திருக்கும். அதனை சம்பந்தப்பட்ட வாடிக்கையாளர்கள் பின்பற்றி தங்கள் வாழ்வில் மீதமுள்ள வினைகள் நீங்கப்பெற்று நல்வாழ்வு பெறுவார்கள்.
நமது பெருமதிப்பிற்குரிய சித்தர் பெருமக்கள் தங்களது ஞான உள்ளுணர்வால் நாடி சோதிட சாஸ்திரத்தை கண்டறிந்துள்ளனர். அதன் மூலம் இந்த பிரபஞ்சத்தில் உள்ள ஆன்மிக சக்தி மையங்களையும் தெரிவித்து, அவற்றின் மூலம் கர்ம வினைகளை அகற்றும் வழிகளையும் மனித குலத்துக்கு அளித்துள்ளார்கள். அப்படிப்பட்ட ஆன்மிக மையங்கள் திருக்கோவில்களாக அமைக்கப்பட்டன. அங்கு ஆன்மாவின் கர்ம வினைகளை அகற்றும் மகத்தான சக்தி படைத்த யந்திரங்களை பிரதிஷ்டை செய்யப்பட்டன.
நாடி படிக்கும் போது அந்த சக்தி மையங்களை எளிதாக அணுகி பயன் பெறவும், ஆன்மாவின் அழிவற்ற மோட்ச நிலை அடையவும் அவரவருக்குத் தக்க வழிகள் காட்டப்படுகின்றன.
நாடி ஓலை
திரிகாலா அதன் நாடி படிக்கும் செயல்முறையில், துல்லியம் கொண்டதாகவும் நம்பகத்தன்மையுடனும் செயல்படுகிறது. நாடி ஓலைச்சுவடிகள் பரம்பரை பரம்பரையாக நாடி சோதிடர்களின் முன்னோர்களால் பாதுகாக்கப்பட்டு அளிக்கப்பட்ட பொக்கிஷங்களாகும்.
எங்கள் உறுப்பினர்கள் இந்த உலகில் அறியப்படாத, எங்களிடம் உள்ள நாடிச்சுவடிகளிலிருந்து தேவையான நாடிகளை பெற்று பலன்களை உரைக்கும் திறன் பெற்றவர்கள். அந்த வகையில் எங்களது பிரத்யேக தேடல் முறைகள் வாடிக்கையாளருக்கு முற்றிலும் தெளிவான வழிகாட்டுதல்களை அளிக்கிறது.
நாடி சோதிடர்கள்
எங்கள் நாடி சோதிடர்கள் அனைவருமே எங்களுடைய மெய்ஞான ஒளி பெற்ற ரிஷியான சிவப்பிரகாசம் அய்யா அவர்களால் தேர்வு செய்யப்பட்டவர்கள் ஆவர். மேலும் அவர்கள் இந்தியாவில் உள்ள வைத்தீஸ்வரன் கோவில் நாடி சோதிட மையத்தில் கடுமையான பல்லாண்டு காலம் பயிற்சிகளை பெற்றவர்களாவர்.
அவர்கள் சித்தர்கள் கூறியுள்ள வழிமுறைகளின் படி தங்கள் தனிப்பட்ட வாழ்க்கையை நடத்தி வருகிறார்கள். அந்த வகையில் எங்கள் பெருமதிப்பிற்குடைய குரு பாரம்பரிய முறைப்படியும், ஆன்மிக அளவீடுகளின் படியும் அவர்களை தேர்வு செய்து நாடி படிக்க நியமித்துள்ளார்கள். அதன் மூலம் ஆன்மாவின் கர்ம வினையறியும் இந்த சாஸ்திர முறை மாறுபட்ட விளைவுகளை ஏற்படுத்தாமல் பொருத்தமான வழிகாட்டுதல்களை வாடிக்கையாளருக்கு அளிக்கிறது.
எங்கள் பேரன்பிற்குரிய ரிஷி சிவப்பிரகாசம் அய்யா 13-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வாழ்ந்து, இந்தியாவின், தமிழ்நாட்டில் உள்ள திருச்சி என்ற நகரத்திற்கு அருகே சித்தி பெற்றார். அவர் சித்தி அடைவதற்கு முன் அளித்த ஆன்மிக போதனைகள், பயிற்சிகள் ஆகியவை இன்றளவும் எங்களுக்கு வழிகாட்டி வருகின்றன.
எங்கள் வழிமுறை சித்தர்களின் ஆகம சாஸ்திரத்தை அடிப்படையாக கொண்டது. திரிகாலாவின் உறுப்பினர்கள் குருவின் தெய்வீக போதனைகளை 15 ஆண்டுகளாக பின்பற்றி வருகிறார்கள். அவர்களில் பலர் 45 ஆண்டுகளாக குருவின் போதனைகளை பின்பற்றி வருவது குறிப்பிடத்தக்கது. எங்களது தனிச்சிறப்பு என்னவென்றால், பழமையான பல்வேறு பாரம்பரிய முறைகளைப் பின்பற்றி ஆன்மாவின் கர்ம வினைகளை அகற்றும் தெய்வீக சேவைகளை உலகத்தவர் அனைவருக்கும் எளிமையான முறையில் அளிப்பதாகும்.