கர்மவினை போக்கும் கால பைரவர் ராகு கால பூசை
கால பைரவர் என்பவர் சகல உலகங்களையும் படைத்துக், காத்து நிற்கின்ற சிவபெருமானின் கால தத்துவத்தை வெளிப்படுத்தும் தோற்றம் ஆகும். கால பைரவர் பூசை ராகு காலங்களில் செய்யப்படுகிறது. சனி, ராகு மற்றும் கேது ஆகிய கிரகங்கள் ஏற்படுத்தும் கர்ம வினை பாதிப்புகளிலிருந்து மீள கால பைரவர் பூசை என்பது சிறந்த வழியாகும்.அதன் மூலம் ராகு மற்றும் கேது ஏற்படுத்தும் கர்ம தோச விளைவுகளிலிருந்து எளிதாக நாம் விடுபட்டு மகிழ்ச்சியான வாழ்வை பெற முடியும்.
கால பைரவர் பூசை மக்களின் துன்பங்கள் அகற்றி, மகிழ்ச்சியான வாழ்வைத் தரக்கூடியது.