
வெற்றிலை பிரசன்னம் என்பது வாழ்க்கை பிரச்சினைகளுக்கு பொருத்தமான தீர்வுகளை தரும் பாரம்பரிய பிரசன்ன ஜோதிட முறையாகும். சகல துன்பங்களுக்கும் பிரபஞ்சம் தரும் தீர்வுகளை இதன் மூலம் அறிந்து நலம் பெறலாம்.
வியாபாரம், தொழில், உறவுச்சிக்கல், சட்டச்சிக்கல் ஆகியவற்றுக்கு நல்ல தீர்வை பெற முடியும்.
சோழி பிரசன்னம் மூலம் உங்கள் மனதை வருத்தும் பல்வேறு கேள்விகளுக்கு உடனடியான பதில்களை பெறலாம். வாழ்வின் பல சிக்கல்களுக்கு இந்த தெய்வீக வழிகாட்டுதல் மூலம் சுலபமான தீர்வுகளை துல்லியமாக பெறலாம்.
கண் திருஷ்டி, தாமத திருமணம், பண முதலீடு ஆகியவற்றுக்கு தகுந்த பதிலை உடனே பெறலாம்.
இந்த பழமையான ஆன்மிக முறையானது ஒருவரது இன்ப, துன்பங்களை சுலபமாக கண்டறிகிறது. தொடங்கிய முயற்சிகளில் நிச்சய வெற்றி பெற அனைத்து வழிகளையும் இம்முறை மிகச்சரியாக கணித்து தெரிவிக்கிறது.
முன்னோர் சாபம், பாபம், சந்தான பாக்கிய தடை, மரபணு நோய் ஆகியவற்றுக்கு இம்முறை சிறந்த தீர்வுகளை தருகிறது.
தெய்வீக தந்திர சாஸ்திர தேவதை விஷ்ணுமாயாவின் தெய்வீக அருளால் ஆன்மாவின் பாதையை எளிதாக அறியலாம். சகல மாந்த்ரீக, பில்லி, சூனிய, ஏவல் பாதிப்புகளை சுலபமாக தீர்க்கலாம்.
குல தெய்வ அருள் பெற, பில்லி-சூனியம், ஏவல், துஷ்ட சக்திகளை அகற்ற இந்த முறை துல்லியமாக துணை நிற்கிறது.
வசிஷ்ட மகரிஷி அருளிய இந்த பிரத்யேக தெய்வீக வழிமுறை இதர பிரசன்ன முறைகளை விட சிறப்பானது எனலாம். ஒருவரது கர்ம வினையை ஆராய்ந்து கேள்விகளுக்கு உடனடி பதிலை இம்முறை தருகிறது.
பிறந்த நேரம் சரி செய்தல், ஜாதக குறைகளை அறிதல், நோய் தீர வழிகள் ஆகியவற்றை இம்முறை துல்லியமாக தெரிவிக்கிறது.
மேற்கண்ட தெய்வீக வழிகாட்டு நெறிமுறைகள் பாரம்பரிய ஜோதிடம் மற்றும் நாடி ஜோதிடம் ஆகிய முறைகளிலிருந்து முற்றிலும் மாறுபட்டவையாகும். அவற்றின் மூலம் ஏற்படுத்தப்படும் ஆன்மிக தொடர்புகள் ஒருவருக்கு நல்வழியை தெளிவாக காட்டுகின்றன.
அந்த நல் வழிகாட்டுதல்கள் பேரண்ட சக்தி மையத்திலிருந்து தக்க குருமார்களால் பெறப்பட்டு ஒருவருக்கான தனிப்பட்ட வழிகாட்டுதலாக திரிகாலாவில் அளிக்கப்படுகிறது.
இன்றைய காலகட்டத்தில் ஆன்மீக வழிகாட்டி அவசியமா..?
கலியுகத்தில் கர்மவினைகளால் வழிநடத்தப்படும் மனித வாழ்க்கையில் துன்பங்கள் ஏற்படுவதை தவிர்க்க இயலாது. ஒருவரிடம் உள்ள ஆன்மீக சக்தியால் துன்பங்களை அகற்ற முடியும். ஆனால், ஆன்மீக சக்தி அனைவரிடத்திலும் இருப்பதில்லை. அந்த வகையில் ஒரு ஆன்மீக வழிகாட்டி தேவைப்படுகிறார். அவருடைய தெய்வீக வழிகாட்டுதல் மூலம் ஒருவரது கர்ம வினைகளை இந்த பேரண்டத்தின் கருணையினால் நிவர்த்தி செய்து கொள்ள முடியும். அது மட்டுமல்லாமல் வாழ்க்கையில் மன நிறைவுடன் அவரவர்களுக்கு உரிய குடும்ப கடமைகளை செய்து, இறையருளையும் பெற முடிகிறது. தெய்வீக அருளை பெறுவதற்கு ஒரு முறைப்படுத்தப்பட்ட வழிகாட்டுதல் மிகவும் அவசியம். அந்த இடத்தை பூர்த்தி செய்ய தகுதி வாய்ந்த, பாரம்பரியமிக்க, ஆன்மீக நெறிமுறைகளில் அனுபவம் வாய்ந்த ஒரு வழிகாட்டி தேவை. ஆன்மிகம் என்ற மிக அவசியமான வாழ்வியல் நெறிமுறைக்கு அப்படிப்பட்ட தெய்வீக வழிகாட்டுதல் இல்லாமல் தனி மனிதர் ஒருவர் தன்னுடைய துன்பங்களை தீர்க்கவோ அல்லது வாழ்க்கையின் லட்சியங்களை அடைவது என்பதோ இயலாத காரியம். அதனால் ஒவ்வொருவருக்கும் ஆன்மீக வழிகாட்டி ஒருவர் மிக அவசியம். இன்றைய சூழலுக்கேற்ப உலக மக்கள் அனைவரும் எளிதாக பெறும் வகையில் ஆன்லைன் மூலம் சித்தர் பாரம்பரியத்தில் வந்த, ஆன்மீக நெறிமுறைகளில் பல்லாண்டு அனுபவம் பெற்றவர்களின் வழிகாட்டுதல் சேவை திரிகாலாவில் உலக மக்கள் அனைவருக்கும் வழங்கப்படுகிறது.
எங்களுடைய பாரம்பரியம்
எங்களுடைய குரு ரிஷி சிவப்பிரகாசம் ஐயா அவர்கள் 13-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் இந்தியாவிலுள்ள தமிழ்நாட்டின் திருச்சி என்ற நகருக்கு அருகில் சித்தி அடைந்தார். அவர் தன்னுடைய மானுட ரூபத்தில் இருக்கும்பொழுது எங்களுக்கு வழங்கிய போதனைகள், ஆன்மீக பயிற்சிகள் இன்றைய காலகட்டத்திலும் எங்களை வழிநடத்திச் செல்லும் தெய்வீக தன்மை பெற்றவையாக இருக்கின்றன.
எங்களுடைய நாடி ஜோதிடர்கள் இந்தியாவில் உள்ள தமிழ்நாட்டின் வைத்தீஸ்வரன் கோவிலில் உள்ள நாடி ஜோதிட மையத்தில் பயின்று சிக்கலான நுட்பங்களை அறிந்துள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் நாடி ஜோதிடத்தில் 25 வருடங்கள் முதல் 50 வருடங்கள் வரை அனுபவம் பெற்றவர்கள். அவர்கள் பாரம்பரியமிக்க நாடி ஜோதிட குடும்பங்களை சார்ந்தவர்களாக இருப்பதால் பரம்பரை பரம்பரையாக நாடி ஜோதிடத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
எங்களிடம் நாடி ஜோதிடம் படிக்க வரும் வாடிக்கையாளர்கள் கந்தர் நாடி, ஜீவநாடி, பிரசன்ன நாடி உள்ளிட்ட பல்வேறு நாடி வகைகளில் இருந்து தங்களுடைய கேள்விகளுக்கான விடைகளை பெற முடியும். அந்த வகையில் ஆன்ம ஞானம் பெற்ற ரிஷி முனிவர்களின் அருளால் அவர்கள் அளிக்கும் தெய்வீக வழிகாட்டுதல்கள் மூலம் தனிமனிதருடைய கர்மவினைகளின் தன்மைகளை அறிந்து, எளிமையான தீர்வுகளை எங்கள் நாடி ஜோதிடர்கள் அளிக்கிறார்கள்.
பனை ஓலைச்சுவடிகள் மூலம் வாழ்க்கையில் ஒருவர் அனுபவிக்க வேண்டிய கர்மவினைகள் பற்றி சித்தர்கள் குறிப்பிட்ட ரகசிய உண்மைகளை சித்தர்கள் அருளால் அறிந்து, துல்லியமான பலன்களை வாடிக்கையாளர்கள் பெற முடியும். அந்த வகையில் எங்களுடைய நாடி ஜோதிடர்கள் குழு இந்த உலகில் கிடைப்பதற்கரிய பனை ஓலைச்சுவடி நாடிகளின் மூலமாகவும் வாடிக்கையாளர்களுக்கு துல்லியமான பலன்களை ஆய்வு செய்து வழங்குகிறார்கள்.
திரிகாலாவில் ஆன்லைன் மூலம் ஒருவர் இருந்த இடத்திலிருந்தே ஆன்மிக வழிகாட்டியிடம் தகுந்த ஆலோசனைகளை பெற தகுந்த தொழில்நுட்ப வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
உங்களுக்குரிய பொருத்தமான ஆன்மிக வழிகாட்டுதலை பெற நீங்கள் செய்யவேண்டியது இவையே :-
ஆன்லைன் ஆலோசனைக்கு நேரம் தேர்வு செய்க
தெய்வீக நியதிகளை பின்பற்றவும்
தெய்வீக வழிகாட்டியுடன் ஆன்லைனில் ஆலோசிக்கவும்
கேள்விகளுக்கான பதிலை பெறவும்
கர்மவினை தீர்க்கும் முறைகளை பின்பற்றவும்
பரிகாரங்களை முறையாக செய்யவும்
ஆன்மிக சிகிச்சை என்பது ஒருவரது வாழ்நாள் முழுவதும் தேவைப்படும் ஒன்றாகும். ஒருவர் சந்திக்கும் வாழ்வியல் சிக்கல்களின் நிலைக்கேற்ப அவருக்கு ஆன்மிக சிகிச்சை மற்றும் வழிகாட்டுதல் தேவைப்படலாம்.
உங்கள் பிரச்சினை மற்றும் கேள்விகள் அனைத்தையும் வரிசையாக ஒரு பேப்பரில் எழுதி வைத்து அதை ஆலோசனையின் போது மறக்காமல் கொண்டு வருவது நல்லது. அப்போதுதான் ஆலோசனை நேரத்தில் நீங்கள் கேட்க நினைத்த விஷயங்களை மறக்காமல் கேட்டு தக்க விடைகளை பெற முடியும்.
ஆன்மிக சிகிச்சை என்பது இந்த பேரண்ட சக்தியின் வழிகாட்டுதல் படி ஒருவரது கர்ம வினை பதிவுகளை அகற்றி, அவருக்குரிய தனிப்பட்ட வழிகளை அன்புடன் அளித்து முன்னேறச் செய்யும் வழிகாட்டு நெறிமுறையாகும். அதனால், எவ்வித பயமோ, தயக்கமோ தேவையில்லை.
நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும். உருவமற்ற ஆன்மிக ஆற்றலுக்கு இடம், காலம் போன்ற எவ்வித கட்டுப்பாடுகளும் கிடையாது. தேவதைகளும்,சித்தர்களும் எங்கும், எப்போதும் இருப்பார்கள். அனைத்தையும் பார்ப்பார்கள். உலகில் ஒருவர் எங்கே இருந்தாலும் அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சை ஆன்மிக ஆற்றல் மூலம் துல்லியமாக உடனடியாக அவருக்கு சென்றடைந்து விடும்.
திரிகாலா ஆன்லைன் ஆலோசனை பெற 3 எளிமையான வழிகளை உருவாக்கியுள்ளது. உங்களுக்கு வசதியான நேரத்தை பதிவு செய்து கொண்ட பின்னர் எங்கள் பிரதிநிதி உங்களுடன் தொடர்பு கொண்டு ஆலோசனை பெறும் வழிமுறைகளை தெரிவிப்பார்.