திருச்செந்தூரில் சத்ரு சம்ஹார ஹோமம் செய்ய இப்போதே முன்பதிவு செய்யுங்கள்.

திருச்செந்தூரில் சத்ரு சம்ஹார ஹோமம் செய்ய என் அருகில் உள்ள சிறந்த இடம்

திருச்செந்தூர் சத்ரு சம்ஹார ஹோமம் - எதிரிகளை வெல்ல உதவும்

Embrace New Beginnings

திருச்செந்தூர் சத்ரு சம்ஹார திரிசதி ஹோமம், எதிர்மறை ஆற்றலை அகற்றவும், எதிரிகளிடமிருந்து பாதுகாப்பையும், உங்கள் வாழ்க்கையில் அமைதி மற்றும் செழிப்பைக் கொண்டு வரவும் வடிவமைக்கப்பட்ட ஒரு சக்திவாய்ந்த ஆகம சடங்கு ஆகும். இந்த ஹோமம், தெய்வீக வீரரான சுப்ரமணியரின் (கார்த்திகேயன் அல்லது முருகன் என்றும் அழைக்கப்படும்) எதிர்மறை ஆற்றலை நடுநிலைப்படுத்துவதற்க்கும் எதிரிகள் வீழ்த்தி வெற்றி பெறுவதற்கும் மேற்கொள்ளப்படுகிறது.


சத்ரு சம்ஹார திரிசதி ஹோமம் தெய்வீக ஆற்றலைப் பயன்படுத்தி, ஆகாய சக்திகளின் தளபதியாகவும் தீய சக்திகளை அழிப்பவராகவும் போற்றப்படும் சத்ரு சம்ஹார மூர்த்தி (கார்த்திகேயன் அல்லது முருகன் என்றும் அழைக்கப்படும்) ஆசீர்வாதங்களைப் பெறச் செய்கிறது என்பது ஐதீகம். இந்த ஹோமம் எதிரிகளால் ஏற்படும் எதிர்மறையான தாக்கங்களை நீக்கி நல்லிணக்கம் மற்றும் பாதுகாப்பை மேம்படுத்தும் ஆற்றல் கொண்டது.


திருச்செந்தூர் சத்ரு சம்ஹார திரிசதி ஹோமம், சத்ரு சம்ஹார மூர்த்தி அருளைப் பெறுவதற்காக செய்யப்படுகிறது. சத்ரு சம்ஹார ஹோமம் என்பது ஒரு பழமையான சடங்கு முறையாகும், இது தடைகளை சமாளிக்கவும், எதிரிகளை தோற்கடிக்கவும், எதிர்மறை ஆற்றல்களை அகற்றவும் சுப்பிரமணிய பகவானின் பாதுகாப்பையும் ஆசீர்வாதத்தையும் நாடுகிறது.

திருச்செந்தூர் சத்ரு சம்ஹார ஹோமம் - ஐயமும் தீர்வும்

திருச்செந்தூர் புண்ணிய ஸ்தலத்தில் சத்ரு சம்ஹார ஹோமத்தை செய்வதன் மூலம், சத்ரு சம்ஹாரமூர்த்தி அருளைப் பெற்று, எதிரிகளை தோற்கடித்து வெற்றி பெற, உடலும் மனதும் அமைதியுடன் செயல்பட உதவுகிறது. இந்த ஹோமத்தில் பங்கேற்பவர்களுக்கு கீழ்காணும் நன்மைகள் கிடைக்கின்றன,

  • தீய சக்திகள், எதிரிகளின் தாக்கத்திலிருந்து பாதுகாப்பு அளிக்கிறது.
  • வாழ்க்கையின் சவால்கள் மற்றும் பிரச்சனைகளுக்கான தீர்வுகளை வழங்குகிறது.
  • எதிரிகளை வீழ்த்தி வெற்றி பெற உதவுகிறது.
  • சட்டப் பிரச்சினைகளில் வெற்றியை உறுதி செய்கிறது.
  • எதிரிகளின் தடைகளை அகற்றி வாழ்க்கையை சமநிலைப்படுத்துகிறது.

எங்களுடைய குருமார்கள், உங்கள் பிறந்த நட்சத்திரம், கர்ணம், திதி, யோகம் ஆகியவற்றை விண்வெளி நிகழ்வுகளுடன் பொருத்தி, கர்ம வினைகளை சமன் செய்ய உகந்த நேரம் மற்றும் தேதியை ஆராய்ந்து தீர்மானிப்பார்கள். பின்னர், உங்களுடன் கலந்துகொண்டு சத்ரு சம்ஹார ஹோமத்தின் நிகழ்வுகளை உறுதி செய்யப்படும்.


ஹோமம் செய்வதற்கு உகந்த இடம் : திருச்செந்தூர் கோவில் மற்றும் மத சடங்குகள் நடைபெறும் பிற இடங்கள்.


மங்களகரமான நேரம் பிரம்ம முகுர்த்தம், சூரிய உதயத்திற்கு முன் 4.30 மணி முதல் 6.00 மணி வரை.


மங்களகரமான தேதி : அனைத்து தினங்களிலும், குறிப்பாக சஷ்டி தினங்களில் செய்யுவது விசேஷமாக கருதப்படுகிறது.

நீங்கள் எந்த இடத்தில் இருந்தாலும், எங்களுடைய உயர்தர வீடியோ ஒளிபரப்பு தொழில்நுட்பத்தின் மூலம் இந்த சத்ரு சம்ஹார ஹோமத்தில் பங்கேற்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


உங்களுக்கான உறுதியளித்த நாள் மற்றும் நேரத்தில், எங்களுடைய தலைமை குருநாதர் ஹோமத்தை நடத்துவார். அவர் வழங்கும் வழிகாட்டுதலின்படி, உங்கள் கர்ம வினைகளை நீக்குவதற்கான திருச்செந்தூர் சத்ரு சம்ஹார ஹோமம், சடங்குகள், பூஜைகள் மற்றும் தீபாராதனைகள் நேரடி ஒளிபரப்பில் பங்கேற்று, எந்த கூடுதல் செலவின்றி உங்கள் இடத்திலிருந்தே உங்கள் பிரார்த்தனைகள் மற்றும் வேண்டுதல்களை நிறைவேற்ற முடியும் அல்லது,


நேரில் ஹோமம் பூஜையில் கலந்து கொள்ளலாம்.

ஹோமத்தின் மூலம் உங்கள் பிரார்த்தனைகள் மற்றும் வேண்டுதல்கள் திருச்செந்தூர் சத்ரு சம்ஹார பகவானின் பாதங்களில் சமர்ப்பிக்கப்படுகின்றன. திருச்செந்தூர் சத்ரு சம்ஹார பகவானின் அருளினால், கர்ம வினைகளால் வாழ்க்கையில் ஏற்படும் அனைத்து செய்வினை, எதிரிகள், தடைகள், சவால்களை மற்றும் தடங்களை அகற்றி, நம்மைப் பாதுகாத்து அனைத்து முயற்சிகளிலும் வெற்றி பெற உதவுகிறது.


இந்த திருச்செந்தூர் சத்ரு சம்ஹார ஹோமம் வழிபாட்டில் "ரட்சை" என்று அழைக்கப்படும் ஹோம பஸ்மம் மற்றும் குங்குமம் பிரசாதமாக உங்களுக்கு அனுப்பி வைக்கப்படும். இதனை உங்கள் பூஜை அறையில் வைத்து, தினமும் உங்கள் நெற்றியில் பூசிக் கொண்டே பயன்படுத்தி வர, இறைவனின் அருளைப் பெற உதவுகின்றது.

திரிகாலாவின் திருச்செந்தூர் சத்ரு சம்ஹார ஹோமம் சேவைகள்

திரிகாலா ஹோம சேவைகள் உங்கள் வீட்டிலிருந்தே பண்டைய ஆன்மிக சடங்குகளின் மகிமையையும் தெய்வீக அருளையும் அனுபவிக்க சிறந்த வாய்ப்பை வழங்குகிறது. சத்ரு சம்ஹார ஹோமத்தின் புனித ஆற்றலையும் சக்தியையும் எங்களின் ஆன்லைன் தளத்தின் மூலம் நேரடியாக உங்கள் பங்களிப்புக்கு கொண்டு வருகிறோம். நீங்கள் வீட்டில் இருந்து கலந்துகொண்டாலும், அல்லது நேரில் பங்கேற்றாலும், இந்த தெய்வீக நிகழ்வில் எளிதாக இணைந்து அனுபவிக்கலாம்.

திரிகாலாவின் தலைமை குருநாதரின் மேற்பார்வையில், குருமார்கள் ஆகம விதிகளை மிகத் துல்லியமாக பின்பற்றி திருச்செந்தூர் சத்ரு சம்ஹார ஹோமம் நடத்துகிறார்கள். இந்த சடங்கின் போது உருவாகும் அக்னியின் ஒளி மற்றும் மந்திரங்களின் ஒலி பிரபஞ்ச சக்திகளுடன் இணைந்து, உங்கள் உள்ளார்ந்த ஆற்றல்களை சமநிலைப்படுத்தி, புத்துணர்வையும் தெய்வீக ஆற்றலையும் அளிக்கிறது. இது உங்கள் வாழ்க்கைக்கு தேவையான நேர்மறை ஆற்றல்களை உருவாக்கி, எதிர்மறை சக்திகளை அகற்ற உதவுகிறது.

ஆகம விதிகளுக்கு ஏற்ப நடத்தப்படும் இந்த திருச்செந்தூர் சத்ரு சம்ஹார ஹோமம் (அ)  திரிசதி ஹோமம் தெய்வீக அருளைப் பெறுவதற்கும், வாழ்க்கையின் தடைகளை அகற்றுவதற்கும், உங்கள் வாழ்வை முன்னேற்றுவதற்கும் உதவுகிறது. இக் சத்ரு சம்ஹார ஹோமம், வாழ்க்கையில் ஏற்படும் எதிரிகள் தடைகள், சவால்களை மற்றும் தடங்களை அகற்றி, நம்மைப் பாதுகாத்து அனைத்து முயற்சிகளிலும் வெற்றி பெற உதவுகிறது.

திருச்செந்தூர் நடைபெறும் சத்ரு சம்ஹார திரிசதி ஹோமம் பின்வரும் முக்கிய நடைமுறைகளை உள்ளடக்கியதாகும்:

எங்களை பற்றி

13ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில், மதிப்பிற்குரிய ஐயா சித்தர் சிவப்பிரகாசம் திருவெள்ளறை திருச்சிக்கு அருகில் சிவஞான ஜீவசமாதி அடைந்தார். தனது ஞானத்தினால் ஆன்மீக சித்தாந்தங்களை விளக்கி, மனித குலத்தின் கர்மவினை சவால்களை அகற்ற நெறிமுறைகளை உருவாக்கி, சீடர்களுக்கு போதனை செய்து வருகிறார்.


ஐயா சித்தர் சிவப்பிரகாசத்தின் மானசீக சீடர்களான எங்கள் குருமார்கள், அவருடைய போதனைகளை அடிப்படையாகக் கொண்டு, மனிதர்களின் கர்மவினை சவால்களுக்கு நிரந்தர தீர்வுகளைக் கண்டறிந்து, மக்களுக்கு வழிகாட்டி வருகின்றனர்.

எங்களின் நிபுணத்துவம்

தனிநபரின் கர்மவினைகளை ஆராய்ந்து வாழ்க்கை மேம்படுத்த தேவையான தீர்வுகளை வழங்குவதே எங்கள் நிபுணத்துவம். இது தமிழர் பாரம்பரிய ஆகம சாஸ்திரங்களின் தொன்மையான வழிமுறைகளில் இருந்து பெறப்பட்ட அனுபவங்களின் அடிப்படையில் செயல்படுகிறது.


எங்கள் குருமார்கள், கர்மவினை மற்றும் எதிர்மறை ஆற்றல்களை சமநிலைப்படுத்த பரசுராம கல்ப சூத்திரம், தந்திர சமுச்சயம், பதாதி மற்றும் அதர்வண வேத சாஸ்திரங்களில் தேர்ச்சி பெற்றவர்கள். அவர்கள், யந்திரம் போன்ற பரம்பரிய தீர்வு முறைகளில் சிறந்த அனுபவத்துடன், தனிப்பட்ட தேவைகளுக்கேற்ப ஆலோசனைகளை வழங்குகிறார்கள்.

எங்களின் சிறப்பம்சங்கள்

கர்மவினை தீர்வுகள் தனித்துவமான செயல்முறைகளின் மூலம் உங்கள் வாழ்க்கை சவால்களில் இருந்து நிரந்தர ஆன்மீக ஜோதிடத் தீர்வுகளை வழங்க உதவுகின்றன.ஒவ்வொருவரின் கர்மவினைகளுக்கு ஏற்ப, கர்ம பலன்களை நிவர்த்தி செய்ய தகுந்த கோயில்கள், யாக சாலைகள், இயந்திர பூஜைகள் மற்றும் தோஷ நிவர்த்தி பூஜைகளுடன் கூடிய பரிகார முறைகள் எங்களுடைய உள்கட்டமைப்பின் மூலம் சரியான முறையில் மேற்கொள்ளப்படுகின்றன.


மேலும், எங்களுடைய சேவைகள் பல பரிகார ஸ்தலங்கள் மற்றும் ஆன்மீக வல்லுனர்களுடன் இணைக்கப்பட்டுள்ளதால், பரிகாரங்களை அதிகாரபூர்வமாக மற்றும் நேர்த்தியாக செயல்படுத்த உறுதிப்படுத்தும் சாத்தியங்களை உருவாக்குகிறது.

Guruji

எதிரிகள், தடைகள் மற்றும் சவால்களை சமாளிக்க விரும்புகிறீர்களா ?

சத்ரு சம்ஹார மூர்த்திக்கு - எங்கள் இதர சேவைகள்

சத்ரு சம்ஹார யந்திரம்

நோய்கள், கடன்கள், எதிர்மறை ஆற்றல்கள், சாபங்கள் மற்றும் எதிரிகளிலிருந்து பாதுகாப்பு அளித்து,மனதை கட்டுப்படுத்தி முயற்சிகளில் வெற்றியை அடைய உதவும் சக்திவாய்ந்த சத்ரு சம்ஹார யந்திரம்.

கந்த சஷ்டி பூஜை

வாழ்க்கை பிரச்சனைகள், திருமண தடைகள், குழந்தையின்மை, தொழில் முடக்கம், எதிரிகள் தொல்லை போன்ற அனைத்து பிரச்சனைகளையும் தீர்க்க உதவும் கந்த சஷ்டி பூஜையில் பங்கேற்கவும்.

சத்ரு சம்ஹார அபிஷேக பூஜை

சத்ரு சம்ஹார மூர்த்தியின் உயிர்ச்சக்தி பெற்று, அனைத்து தீவினைகள்,எதிரிகள் மற்றும் பிரச்சனைகள் தீர்ந்து, ஞானத்தில் சிறந்து அமைதியான வாழ்க்கை உதவும் சத்ரு சம்ஹார அபிஷேக பூஜையில் பங்கேற்கவும்.

சத்ரு சம்ஹார மூர்த்தி பூஜை

நோய்கள், கடன்கள், எதிர்மறை ஆற்றல்கள், சாபங்கள் மற்றும் எதிரிகளிலிருந்து பாதுகாப்பு அளித்து, மனதை கட்டுப்படுத்தி முயற்சிகளில் வெற்றியை அடைய உதவும் சத்ரு சம்ஹார மூர்த்தி பூஜையில் பங்கேற்கவும்.