logo

திருமூலர் நாடி

திருமூலர் நாடி

திருமூலர் நாடி

திருமூலர் மகரிஷி நாடி ஓலைச்சுவடி எவ்வகையில் சிறப்பு பெற்றது..? 

எங்களது மிக நீண்ட நாடி சோதிட ஆய்வுகளின் அடிப்படையில், திருமூலரின் ஓலைச்சுவடிகள், நாடி வகைகளிலேயே மிக அரிதான ஒன்று என்று அறிந்துள்ளோம். மகரிஷி திருமூலர் வேத, வேதாகமங்களின் சாரத்தை உணர்ந்து மகத்தான தூய மெய்ஞான அமுதமாக திகழ்பவர். ஆன்மாவின் கர்மப் பாதையை அவரது தெய்வீக பார்வை மூலம் உள்ளுணர்ந்து, மகரிஷி அகஸ்தியர் மூலம் அவற்றை நாம் அறியும் வண்ணம் அருளிச்செய்த ஞானப்பதிவுகளாக அவரது ஓலைச்சுவடிகள் இருக்கின்றன.   

அவ்வகையில் திருமூலர் மகரிஷியின் ஒரே ஒரு பாடல் மூலமே 300 நாட்களுக்கான (தோராயமாக ஒரு ஆண்டு) கர்ம வினைப்பயன்கள் குறித்த விபரங்களை அளித்துள்ளார். திருமூலர் நாடி சோதிடம் என்பது, ஒருவரது கடந்த கால (முற்பிறவி) வாழ்க்கை முறைகள் ஏற்படுத்திய கர்ம வினைகள், அவை இப்போதைய வாழ்வில் ஏற்படுத்திய விளைவுகள், விதிப்படி வாழ்க்கையில் ஏற்பட்ட நல்வினை, தீவினைகள், அவற்றை அகற்ற முயலும் மனித முயற்சிகள் ஆகியவை குறித்து விரிவான பார்வையை அளிக்கிறது. திருமூலர் மகரிஷியின் ஓலைச்சுவடிகள் கி.பி. 5 அல்லது 8-ம் நூற்றாண்டுக்கு இடைப்பட்ட காலகட்டத்தைச் சேர்ந்தவையாக இருக்கலாம். 

கர்மா பற்றி நன்றாக அறிந்த பின்பே அதைச் சீர்படுத்தும் தீர்வுகளைப் பெற முடியும்..   
பதிவு செய்க

திருமூலர் நாடி படிக்கும் முக்கிய தொகுப்பு

திரிகாலா, உங்களது கர்ம வினைகளின் புரியாத மர்மங்களைக் கண்டறிந்து அவற்றைப் புரிந்து கொண்டு நிவர்த்தி செய்வதற்கான வழிவகைகளை திருமூலர் நாடி ஓலைச்சுவடிகள் மூலம் உங்கள் வீட்டுக்கே கொண்டு வந்து தருகிறது. எங்கள் இணையைதள முறையில் நாடி படிக்கும் தொகுப்பில் பதிவு செய்து கொண்டு, உங்கள் நிகழ்கால வாழ்க்கையில் ஏற்பட்ட துன்ப, துயரங்களை நிவர்த்தி செய்து கொள்ளலாம்.

எஞ்சிய கர்ம வினையறிதல்

இந்த நாடித்தொகுப்பில் பதிவு செய்து நாடி படிப்பவர்கள் தங்களது எஞ்சிய கர்ம வினைகள் பற்றிய சகல தகவல்களையும் தீர்க்கமாகக் கண்டறிந்து, அவற்றை நிவர்த்தி செய்து மகிழ்ச்சி நிறைந்த வாழ்க்கையை பெறுகிறார்கள். இந்த நாடி படித்தலில் 8-க்கும் மேற்பட்ட பகுதிகளிலிருந்து பெருமதிப்பு மிக்க தகவல்களை அறிந்து கொள்ளலாம்.   

  • எஞ்சிய கர்ம வினையறிதல்
  • இப்பிறவி கர்ம வினைகள்
  • வாழ்க்கையின் பொதுப்பலன்கள்
  • வாழ்வின் முக்கிய சம்பவங்கள் 
  • நல்வாழ்வுக்கேற்ற நவரத்தினம் 
  • உறவுகளுக்குள் சிக்கல்கள் 
  • தீர்வு தரும் பரிகாரங்கள் 
  • வாழ்வின் பொதுவான அம்சங்கள் 
  • நல்வாழ்வு தரும் மந்திரம் 
பிள்ளைகள் கல்வி முன்னேற்றம்

இந்த நாடி மூலம் உங்கள் குழந்தைகள் கல்வி கற்றலின் பின்னணியில் செயல்படும் கர்ம வினைகளை அறிந்து, நிவர்த்தி செய்து, கற்றல் மேம்பட ஆக்கப்பூர்வ முறைகளை செயல்படுத்தலாம். முக்கியமான ஓலைச்சுவடிகளின் 6-க்கும் மேற்பட்ட தொகுப்புகளிலிருந்து அதன் விபரங்கள் பெறப்படுகின்றன.   

  • சரியான பாடப்பிரிவு தேர்வு 
  • எதிர்கால வாழ்வுக்கு வழிகாட்டுதல்  
  • கர்மவினை பாதிப்பு அறிதல் 
  • உணர்வு - நடத்தை சீர் செய்தல் 
  • வெளிநாட்டு கல்வி (இருந்தால்) 
  • கல்வி மந்திரம், பிரார்த்தனை 
  • துன்ப கர்ம வினை (இருப்பின்) 
  • பரிகார முறைகள் 
  • பிரார்த்தனை தெய்வம்  
ஆன்மிகப் பாதையில் முன்னேறுங்கள்

இந்த நாடித்தொகுப்பில் பதிவு செய்து படிப்பதன் மூலம் உள்ளும், புறமும் அமைதி நிலை பெற்று, உங்களுடைய ஆன்மிக பாதையில் முன்னேறிச் செல்ல வழி கிடைக்கிறது. இந்த நாடியைப் பதிவு செய்து படிப்பவர்களுக்கு 7-க்கும் மேற்பட்ட தொகுதிகளிலிருந்து அவர்களது விபரங்கள் பெறப்படுகின்றன.  

  • கர்ம பலன் விளைவுகள் அறிதல் 
  • பிறவி எடுத்த காரணம் அறிதல் 
  • முக்கிய வாழ்க்கை சம்பவங்கள் 
  • தியானப் பயிற்சி முறைகள் 
  • ஆன்மிகப் பாதை அறிதல் 
  • மன அமைதிக்கு மந்திரம் 
  • குருவை அறிய ஆன்மிக வழி 
  • கர்மா தீர பூஜை, பிரார்த்தனை 
  • அதிர்ஷ்ட வாழ்க்கை அம்சங்கள் 

கர்ம வினை தீர்க்கும் மருந்தகம்

இந்த அமர்வு திரிகாலாவில் உள்ள மெய்ஞானம் பெற்ற குரு அளிக்கும் போதனைகள் மூலம் மட்டுமே வழி நடத்தப்படுகிறது. கர்ம வினைகளால் உருவான தனி மனிதனின் பரு உடல் உருவாகி, பிறப்பெடுத்த காரணத்தை நுட்பமாக ஆராய்ந்தறிய அங்கீகாரம் பெற்ற சரியான வழி ஓலைச்சுவடி நாடி படித்தலே என்று எங்கள் கர்மவினையறியும் வல்லுனர்கள் தெரிவிக்கிறார்கள். 

அவ்வாறு நாடி படித்த பின்னர், பிறப்பெடுத்த ஒரு ஆன்மாவின் பழக்க வழக்கங்கள், நடத்தை முறைகள் ஆகியவை வாழ்வில் உருவாக்கும் விளைவுகளை, தத்துவார்த்தமாகவும், அறிவியல் பூர்வமாகவும் ஆராய்ந்தறிய முடியும் என்று எங்கள் நாடி சோதிட வல்லுநர்கள் குறிப்பிடுகின்றனர். மேலும், அந்த கர்ம வினைகளின் தொடர்ச்சியை மிகச்சரியாக கணித்து, கணித முறைகளுக்குட்பட்டு அவற்றை சமன் செய்யும் சாத்தியக்கூறுகளையும் தெரிந்து கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளார்கள்.

எங்கள் வல்லுநர்கள், இந்த பிரபஞ்சத்தின் வினை மற்றும் விளைவு என்ற விதிகளுக்கேற்ப உங்களுடைய நல்ல மற்றும் கெட்ட கர்மங்களால் உருவான வினைகள் ஏற்படுத்தும் விளைவுகளை சமன் செய்ய அவற்றின் செயல்படும் முறையறிந்து தக்க தீர்வுகளை அளித்து உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள். மேலும், எளிமையான, நடைமுறை சாத்தியமான பரிகார முறைகளையும் பரிந்துரைத்து மகிழ்ச்சியான வாழ்வைப் பெற உங்களுக்கு உதவியாக செயல்படுவார்கள்.

எங்களின் தனிச்சிறப்பு 

பனையோலை சுவடிகளிலிருந்து ஒருவருக்கான நாடியைத் தேடி அறிந்து படித்து கர்ம வினையின் வலுவான பலன்களை அறிவதே திரிகாலா வல்லுநர்கள் கடைபிடிக்கும் வழிமுறை ஆகும். அந்த முறை எங்கள் மெய்ஞானம் அடைந்த குருவின் வழிகாட்டுதல் மூலம் செயல்படுத்தப்படுகிறது.

கர்ம வினையை நிவர்த்தி செய்யும் கலையறிந்த எங்கள் வல்லுநர்கள், ஒரு ஆன்மா எடுத்த பிறப்பிற்கேற்ப பல்வேறு தொடர்ச்சியான கர்ம வினைகளால் சூழப்பட்டு நிற்பதை அறிவியல்பூர்வமாக கண்டறிய உங்களுக்கு உதவியாக இருப்பார்கள்.

அத்துடன், அனுபவம் வாய்ந்த எங்கள் வல்லுனர்கள் ஆன்மாவின் கர்ம படிநிலைகளை ஆழமாக ஆய்வு செய்து அதன் தன்மைகளை வரையறை செய்கிறார்கள். அந்த ஆய்வுகளின் மூலம் பிரபஞ்ச விதிகளுக்கேற்ப அவற்றின் விளைவுகள் நல்ல, தீய பலன்களை அளிப்பதை இனங்காணவும் அவர்கள் உறுதுணையாக உள்ளார்கள்.

அதன் மூலம், கர்மா ஏற்படுத்தும் விளைவுகளாக அந்த ஆன்மா பெறக்கூடிய சாபம், பாவம் மற்றும் துயர அனுபவங்கள் ஆகியவற்றையும் ஆராய்ந்தறிந்து, அவற்றை நிவர்த்தி செய்து மகிழ்ச்சியான வாழ்வைப் பெறவும் எங்கள் வல்லுநர்கள் உதவியாக இருப்பார்கள்.