
நாடி ஓலைச்சுவடி வகைகளில் மனித ஆன்மாவின் கர்ம வினை பயன்களின் விளைவுகளை வெகு துல்லியமாக குறுகிய காலகட்டத்தில் சொல்லக்கூடிய வகையில் தன்னுடைய நாடிச் சுவடிகளை ராஜரிஷி வசிஷ்டர் படைத்திருக்கிறார்.
தன்னுடைய சிறந்த நற்செயல்களுக்காகவும், குணங்களுக்காகவும் உலகம் முழுவதும் அறியப்பட்டவர் ராஜரிஷி வசிஷ்டர். ஆன்மாவின் வாழ்க்கைப் பயணம் பற்றி அவரது தெய்வீக கணிப்புகளை பொதுவான ஆலோசனை அளிக்கும் வகையில் நேரடியாக ஒருவருக்கு தெரிவிப்பது போல தன்னுடைய நாடியில் குறிப்பிட்டுள்ளார்.
ஒரே ஒரு ஒற்றை செய்யுள் மூலமாக கிட்டத்தட்ட 225 நாட்களுக்கு (தோராயமாக 7 மாதங்கள்) ஒரு ஆன்மாவின் கர்மப் பதிவுகள் பற்றி தன்னுடைய விளக்கமான கணிப்புகளை நாடியில் தெரிவித்திருக்கிறார். அந்த வகையில் வசிஷ்டர் நாடி படிப்பதன் மூலம் தெய்வீக வழிகாட்டும் முறைகளை அறிந்து ஒருவருடைய வாழ்க்கைப் பாதையில் உள்ள புதிர்களை விடுவித்து, மகிழ்ச்சியும், அமைதியும் கொண்ட வாழ்வை அடைய முடியும்.
வசிஷ்டர் நாடியில் ஆன்மாவின் பயண அனுபவனக்கள், அதன் இயல்பான வாழ்வு, மனித ஆன்மா அடையும் துன்ப துயரங்கள், இயற்கை அந்த ஆன்மாவிற்கு அளிக்கக்கூடிய பல்வேறு சந்தர்ப்பங்கள், ஆன்மாவின் சுய விருப்பம், மனிதனுடைய படைப்புத்திறன் மற்றும் ஆன்மீக விடுதலை போன்ற பல விஷயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. மகரிஷி வசிஷ்டரின் காலகட்டம் கிமு 6 முதல் 8 நூற்றாண்டுக்கு இடைப்பட்ட காலகட்டத்தை சேர்ந்ததாகும்.
திரிகாலா நாடி சோதிட மையம், ராஜரிஷி வசிஷ்டர் நாடி படிக்கும் தொகுப்பை நீங்கள் தேர்வு செய்வதன் மூலம், அதை வீட்டிலேயே படித்து, வாழ்வில் அறியப்படாமல் உள்ள கர்ம வினைகளை அகற்றி நல்வாழ்வு பெற உதவுகிறது. இக வாழ்வின் துன்ப துயரங்களை அகற்ற வழிகாட்டும் வசிஷ்டர் நாடி படிக்கும் தொகுப்பை நீங்கள் தேர்வு செய்து இணையதளம் மூலம் படித்தறிந்து நற்பயன் பெறலாம்.
இந்த நாடி படிக்கும் தொகுப்பானது ஆன்மாவின் எஞ்சியுள்ள கர்ம வினைகளை கண்டறிந்து அவற்றை அகற்றி, மகிழ்ச்சியான வாழ்வு பெற வழி காட்டுகிறது. அதற்காக 8-க்கும் மேற்பட்ட பகுதிகளிலிருந்து நாடி பலன்கள் படிக்கப்படுகின்றன.
இந்த நாடி படிக்கும் தொகுப்பு, ஒருவரது மகிழ்ச்சியான மணவாழ்க்கைக்கு ஏற்ற வாழ்க்கைத்துணையை அறிய உதவுகிறது. 9-க்கும் மேற்பட்ட நாடி பிரிவுகளிலிருந்து பெறப்பட்ட விபரங்களின் அடிப்படையில் திருமண காலம் அறியப்படுகிறது.
·
துணையின்
பெயர் - வசிப்பிடம்
·
அவரது
தோற்றம்
·
இருவருக்கும்
உள்ள பொருத்தம்
·
திருமண
காலம்
·
துணையின்
குடும்ப விபரம்
·
வாழ்வின்
முக்கிய நிகழ்வுகள்
·
பிரச்சினைகளுக்குரிய
கர்மா
·
இனிய
மண வாழ்வுக்கு மந்திரம்
· பரிகார தீர்வுகள் (இருப்பின்)
இந்த நாடி தொகுப்பை இணையதளம் மூலம் தேர்வு செய்து படித்து, பண வரவு, பொருளாதாரம் மேம்படும் வழி ஆகியவற்றை துல்லியமாக அறியலாம். வாழ்க்கையை மறு சீரமைத்து மனமகிழ்ச்சி தரும் இந்த நாடித்தொகுப்பு, சுமார் 6-க்கும் மேற்பட்ட பிரிவுகளிலிருந்து விபரங்களை சேகரித்து உங்களுக்கு அளிக்கிறது.
இந்த அமர்வு திரிகாலாவில் உள்ள மெய்ஞானம் பெற்ற குரு அளிக்கும் போதனைகள் மூலம் மட்டுமே வழி நடத்தப்படுகிறது. கர்ம வினைகளால் உருவான தனி மனிதனின் பரு உடல் உருவாகி, பிறப்பெடுத்த காரணத்தை நுட்பமாக ஆராய்ந்தறிய அங்கீகாரம் பெற்ற சரியான வழி ஓலைச்சுவடி நாடி படித்தலே என்று எங்கள் கர்மவினையறியும் வல்லுனர்கள் தெரிவிக்கிறார்கள்.
அவ்வாறு நாடி படித்த பின்னர், பிறப்பெடுத்த ஒரு ஆன்மாவின் பழக்க வழக்கங்கள், நடத்தை முறைகள் ஆகியவை வாழ்வில் உருவாக்கும் விளைவுகளை, தத்துவார்த்தமாகவும், அறிவியல் பூர்வமாகவும் ஆராய்ந்தறிய முடியும் என்று எங்கள் நாடி சோதிட வல்லுநர்கள் குறிப்பிடுகின்றனர். மேலும், அந்த கர்ம வினைகளின் தொடர்ச்சியை மிகச்சரியாக கணித்து, கணித முறைகளுக்குட்பட்டு அவற்றை சமன் செய்யும் சாத்தியக்கூறுகளையும் தெரிந்து கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளார்கள்.
எங்கள் வல்லுநர்கள், இந்த
பிரபஞ்சத்தின் வினை மற்றும் விளைவு என்ற விதிகளுக்கேற்ப உங்களுடைய நல்ல மற்றும்
கெட்ட கர்மங்களால் உருவான வினைகள் ஏற்படுத்தும் விளைவுகளை சமன் செய்ய அவற்றின்
செயல்படும் முறையறிந்து தக்க தீர்வுகளை அளித்து உங்களுக்கு உறுதுணையாக
இருப்பார்கள். மேலும், எளிமையான, நடைமுறை
சாத்தியமான பரிகார முறைகளையும் பரிந்துரைத்து மகிழ்ச்சியான வாழ்வைப் பெற
உங்களுக்கு உதவியாக செயல்படுவார்கள்.
எங்கள் நாடி சோதிடர்கள் இந்தியாவில் உள்ள
வைத்தீஸ்வரன் கோவில் நாடி சோதிட மையத்தில் கற்றவர்கள். பரம்பரை பரம்பரையாக நாடி
சோதிட கலையில் ஈடுபட்டுள்ள முன்னோர்களிடமிருந்து அதை கற்றறிந்த பாக்கியம்
பெற்றவர்கள்.
திரிகாலாவின்
நாடி சோதிட வல்லுனர்கள் அனைவருமே கிட்டத்தட்ட 35
ஆண்டு கால அனுபவம் பெற்றவர்கள். அவர்கள் கந்தர் நாடி, ஜீவ நாடி, பிரசன்ன நாடி போன்ற பலவகை நாடிகளை
படிக்கும் திறன் பெற்றவர்கள்.
உலகெங்கும் உள்ள
வாடிக்கையாளர்களுக்கு எங்கள் விரிவான சேவைகளை அளிக்கும் வகையில் பல்வேறு விதமான நாடி
படிக்கும் முறைகள் மூலம் அனைத்து தரப்பு மக்களின் கர்ம வினை மற்றும் விளைவுகளை
கூர்மையாக ஆய்ந்தறிந்து துல்லியமான பரிகார முறைகளையும் அளித்து வருகிறோம்.
இந்த
பிரபஞ்சத்தில் வெளிப்படாமல் உள்ள நாடிச் சுவடிகளிலிருந்தும் வாடிக்கையாளர் கர்ம
வினையறியும் சேவையில் எங்கள் குழுவினர் அயராது ஈடுபட்டு வருகிறார்கள்.